கியூபெக்கில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) பகுதியில் 16 வயது மகன் உயிரிழந்த சம்பவத்தில், 41 வயதான பிலிப் பெனாய்ட் (Philippe Benoit) என்பவருக்கு எதிராக முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்படுவதற்காகக் கியூபெக் மாகாண பொலிஸார் பிடியாணை (Arrest warrant) பிறப்பித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டிற்குள் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்தச் சிறுவன் கடத்தப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் (Blunt object) அடித்துக் கொல்லப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த மூன்று நாட்களாகப் பொலிஸார் பெனாய்ட்டைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சந்தேகநபருடன் தொடர்புடைய வாகனம் ஒன்றைக் கண்டறிந்த லாக்-ஒக்ஸ்-சேபிள்ஸ் (Lac-aux-Sables) பகுதியை மையமாகக் கொண்டு தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவரை நேரில் கண்டால் பொதுமக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும், உடனடியாக 911 என்ற எண்ணை அழைத்துத் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளன