கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன அதிகாரப்பூர்வமாக ஒரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்ற அழைப்பாணை (சம்மன்) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.