100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந்தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.

இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும்.

தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாக 331 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியமானது, ஆண்டுக்காண்டு பலமாக வளர்ச்சியடைந்து இன்று 1700க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக மாறியுள்ளது.

1946ஆம் ஆண்டளவில், தனது முதன்மை நோக்கமான 750 உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைய இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் வெற்றி பெற்றது. இந்நிதியின் வளர்ச்சிக்கு, பணியாளர் நலன்புரி நிதிச் சட்டம் பெரும் ஆதரவளித்தது, ஏனெனில் அது கட்டாய பங்களிப்பு நிதியாக இருந்தது.

“இலங்கையின் தோட்டத் தொழிலுக்கு தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்களுக்கான கடமையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சமூகத்தின் தூரநோக்கு நடவடிக்கையாக, இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் 331 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு, இன்று 1,700ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்து, 100 ஆண்டுகளாக தனது ஆரம்பகால நோக்கத்தின் தொடர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் தனது இரண்டாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பது, கடந்த காலத்தின் ஒரு அடையாளமாக அல்ல, மாறாக, அது நிறுவப்பட்ட சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புள்ள உயிருள்ள நிறுவனமாகவே ஆகும்” என இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் தெரிவித்தது.

ஓய்வூதிய கொடுப்பனவோடு சேர்த்து, சங்கத்தால் வீட்டுக் கடன்கள், கல்வி உதவி, காப்புறுதி போன்றவை உள்ளடக்கியதாக, இலங்கையின் தோட்டத் தொழில்முறையாளர்களின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான சமூக பாதுகாப்புத் தொகுப்பு இதுவரை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கத்தின் ஆரம்பம் 1919ஆம் ஆண்டு வரை பின்னோக்கிச் செல்கிறது. அப்போது ஹப்புதலை மாவட்டத் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், பயிரிடுபவர்களுக்கான ஓய்வூதிய நிதி ஒன்றை நிறுவுவதன் அவசியத்தை வலியுறுத்தி இலங்கைத் பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதன்படி, கர்னல் டி. ஒய். ரைட் தலைமையிலான துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. பின்னர், அது தொழில்முறை நிபுணர்களின் மதிப்பாய்விற்காக லண்டனின் Ceylon Associationக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1921ஆம் ஆண்டளவில், ஆங்கில புள்ளிவிபரக் கண்காணிப்பு நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் செயல்படுத்தக் கூடிய காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதனுடன் சேர்த்து, தோட்ட உரிமையாளர்களின் வருமானம் அறுவடை மற்றும் பருவமழைச் சுழற்சிக்கு ஏற்ப மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, நெகிழ்வான முதலீட்டு நிதி ஒன்றை நிறுவுவது குறித்த இணையான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.

1923இல், களுத்துறை மாவட்ட எண் 2 குழுவினால், முன்மொழியப்பட்ட நிதியை நாடு முழுவதுமுள்ள அனைத்துத் தொழில்முறைத் தோட்ட ஊழியர்களுக்கும் கட்டாயமாக்குவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

விரிவான சட்டத் திருத்தங்கள் மற்றும் இலங்கைத் தோட்டச் சொத்துக்கள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைச் செயல்முறைக்குப் பின்னர், 1926 மார்ச் 10ஆம் நாள் கண்டியில் உத்தியோகப்பூர்வமாக இலங்கைத் பெருந் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

“சங்கத்தின் அறங்காவலராக, இலங்கை பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனம், அது நிறுவப்பட்ட முற்போக்கான கொள்கைகளை என்றென்றும் பாதுகாத்துச் செயல்பட்டு வருகிறது. எங்களின் அர்ப்பணிப்பு எப்போதும் எங்கள் உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பொறுப்பான மற்றும் நுணுக்கமான நிதி நிர்வகிப்பை உறுதிப்படுத்துவது, மற்றும் மாறிவரும் பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சூழல்களுக்குப் பொறுப்புடன் தகவமைத்துக் கொள்வது ஆகிய கொள்கைகளை நோக்கியே அமைந்துள்ளது.

இலங்கைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், அதன் தொடர்ச்சியான இருப்பும் வளர்ச்சியும் நல்லாட்சி, கூட்டு நம்பிக்கை மற்றும் நீண்டகாலப் பாதுகாப்புக்கான ஒன்றிணைந்த அர்ப்பணிப்பின் உயிருள்ள சான்றாகும்.”

“நாங்கள் பெருமிதமிக்க நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் என்ற மைல்கல்லை அடைந்துள்ள நிலையில், சம்மேளனம் நிறுவப்பட்ட அடிப்படை மதிப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், எதிர்கால சந்ததியினருக்காகவும், நேர்மை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பம்சத்துடன் எங்கள் உறுப்பினர்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும்,” என இலங்கை பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர அவர்கள் தெரிவித்தார்.

cpp

100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந்தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

March 10, 2026

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று

k

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்

March 10, 2026

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச்

no

அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி:வட கொரியா கடும் எச்சரிக்கை

March 10, 2026

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு

nivara

 நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது 

March 10, 2026

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை

lo

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை

March 10, 2026

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி

i

கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விசேட

Airbus_A330-200_-_SriLankan_Airlines_4R-ALG

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்?

March 10, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான்

oor

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

March 10, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை

ha

பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு சர்வதேச தலைமைத்துவ விருது

March 10, 2026

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட