10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் வழக்கு

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு முன்பாக வொஷிங்டனில் ஆதரவாளர்களிடம் ஆற்றிய உரையை தவறாகத் தொகுத்து ஒளிபரப்பியதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனிலுள்ள பிபிசி நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிபிசியின் பனோரமா (Panorama) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த உரைத் தொகுப்பு, “திட்டமிட்டு, தீய நோக்குடன் மற்றும் ஏமாற்றும் வகையில்” திருத்தப்பட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு திங்கட்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில், அவதூறு செய்ததாகவும், புளோரிடா மாநிலத்தின் ஏமாற்றும் மற்றும் அநியாய வர்த்தக நடைமுறைகள் சட்டத்தை (Deceptive and Unfair Trade Practices Act) மீறியதாகவும் தலா 05 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

பனோரமா (நிகழ்ச்சியில், ட்ரம்ப் உரையின் ஒரு மணி நேர இடைவெளியில் கூறப்பட்ட பகுதிகளை இணைத்து,“நாம் கெப்பிட்டல் நோக்கி நடந்து செல்வோம். நானும் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். கடுமையாகப் போராடுவோம்”என அவர் கூறியதாகத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் பிபிசி உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், அந்த உரைத் தொகுப்பை ஒளிபரப்பியது “தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு” என ஒப்புக்கொண்டு ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. ஆனால், இது அவதூறு வழக்காகத் தொடரும் சட்ட அடிப்படை இல்லை என பிபிசி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் மூலம் ஊடகங்களுக்கு எதிரான ட்ரம்பின் சட்டப் போராட்டம் சர்வதேச அளவுக்கு விரிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது