மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு,
10 இலட்சம்
தொழிலாளர்களின்
பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இக்கூட்டத்தில் மிகுந்த கவலை வெளியிடப்பட்டது.
போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எவ்வாறான அவசரத் திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் நாட்டுக்கு ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பு என்பன குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அரசிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மத்திய கிழக்கு நெருக்கடியானது வெறும் சர்வதேசப் பிரச்சினை மட்டுமல்ல, அது இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்புடையது என்பதை இக்கூட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:- மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, அங்கு பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளன.
இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தின் முடிவில், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தவும், உரிய அழுத்தங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடி இலங்கைக்குப் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றுகூடல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.