ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவரே அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தோடு தொடர்புடையவர்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள போண்டை கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித் அக்ரம் (50) என்பவர் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என அந்த மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை தெலங்கானா டிஜிபி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஜித் அக்ரம் ஹைதராபாத்தின் டோலிசவுகி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் கூற்றுப்படி, தாக்குதல் சம்பவத்தின் போது சஜித்தை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் நவீத் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சஜித்திடம் இந்திய கடவுச்சீட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த நவம்பர் மாதம் சஜித் தனது இந்திய கடவுச்சீட்டையும் மகன் நவீத் தனது அவுஸ்திரேலிய கடவுச்சீட்டையும் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் சென்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தெலங்கானா டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சஜித் ஹைதராபாத்தில் பி.காம் படிப்பை முடித்த பின்னர் வேலை தேடி அவுஸ்திரேலியா சென்றதாகவும், அங்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அவுஸ்திரேலியாவில் பிறந்ததால் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்.

சஜித் அக்ரம் அவுஸ்திரேலியா குடிபெயர்ந்த பின்னர் கடந்த 27 ஆண்டுகளில் ஆறு முறை மட்டுமே ஹைதராபாத் வந்துள்ளதாகவும், பெற்றோரை சந்திப்பதற்கும் சொத்து தொடர்பான விடயங்களுக்காகவும் அவர் வருகை தந்ததாகவும் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தபோதும், இறுதிச்சடங்கிற்காக அவர் இந்தியா வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் இருந்த காலகட்டத்திலும், 1998 க்கு முன்பும் சஜித்திற்கு எதிராக எந்தவித பொலிஸ் பதிவுகளும் இல்லை என்றும், அவரது நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினருக்கும் எதுவும் தெரியாது என்றும் தெலங்கானா டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது