விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது.

வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் மூடியிருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள மணல் அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியாவது குறித்த மணலை அகழ்ந்து அகற்ற வேண்டும். அதன் மூலமே மீளவும் இந்நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இதற்கான உதவிகளை எமக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் பற்றி திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசனிடம் வினவியபோது

“வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும்.அகழும் செலவை உரிய விவசாயிகள் மணலை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் சிறிது தாமதித்து அடுத்த போகத்திற்கு முன்னர் மணல் அகழும் நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும்”எனவும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பதிலளித்தார்.

eg

பண்டிகைக் கால முட்டை விலை அதிகரிப்பு?

December 11, 2025

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மையற்றவை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்

namal-1

நாட்டில் இடம்பெற்ற இறுதி போரின் பின் மக்கள் எப்படி இயல்பு வாழ்வுக்கு வந்தார்கள் என்பதை எம்மிடம் அறியுங்கள் – நாமல் ராஜபக்ச

December 11, 2025

இறுதி போரின் பின்னர் நடைபெற்ற மீள் குடியேற்றம் மற்றும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பிலான அனுபவங்களை பெற்றுக்

kaya

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கயந்த கருணாதிலக்க

December 11, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம்

g

தங்கம் விலை குறைந்தது..

December 11, 2025

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வார

mah

மகாவலி ஆற்றில் விழுந்தவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்…

December 11, 2025

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் ஒருவர் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

man

மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

December 11, 2025

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக

Rajeepa

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் தீர்வு

December 11, 2025

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும்,

pri

எதிர்வரும் 16 ஆம் திகதி பாலர் பாடசாலைகளும் திறப்பு

December 11, 2025

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில், மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கக்கூடிய

jail

படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக ஐவர் கைது

December 11, 2025

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப்

ja

யாழ். அரச அதிபருக்கும் வடபிராந்திய கடற்படைத் தளபதிக்குமிடையே விசேட கலந்துரையாடல்!

December 11, 2025

வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகேவின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (10) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில்

par

பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் கைது

December 11, 2025

பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை

ss

யாழ் ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியை தீ விபத்தினால் உயிரிழப்பு

December 11, 2025

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் ஆசிரியை உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில்