விஜய் ஆலோசனை; அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இதற்கான, ஆலோசனையை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் மேற்கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆடை விஷயத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி, காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டையை விஜய் அணிந்து வருகிறார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சகோதரர் வீட்டு இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை கேட்டுப் பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது, “ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள், ஏன் தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்த்து பேசி பகைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சி.பி.ஐ. விசாரணைக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, நீங்கள் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்” என்று ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

அதன்பிறகுதான் தனது பிரசார கூட்டங்களில், மத்திய அரசை விமர்சிப்பதை நடிகர் விஜய் நிறுத்திக்கொண்டார். தற்போது, கூட்டணி குறித்து பவன் கல்யாண் வழங்கிய ஆலோசனையையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வார் என்றே தெரிகிறது.

நடிகர் விஜய்யிடம் பவன் கல்யாண், “திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏராளமான மக்கள் வந்திருந்தபோதும், எனது அண்ணன் சிரஞ்சீவியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனமான அரசியல் முடிவை எடுக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், குறிப்பாக தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தேன்.

அதன் மூலம் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜனசேவா அரசியலைத் தக்க வைத்துக்கொண்டேன். எனவே, அதேபோல் நீங்களும் சாணக்கியத்தனமாக செயல்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உங்களுக்கான அரசியல் இடத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், 50 இடங்களுக்கு குறையாமல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கட்சியின் தலைவர் விஜய்யுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இனி இறுதி முடிவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் எடுக்க வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் காத்திருப்பது இதற்குத்தானாம்.

தற்போது, விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றி பெற்றால், வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவால் அளிப்பதுடன் தேர்தலில் வெற்றி பெறவும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக

5KALS5J5YRAPVFZYPRQXZWAHCI

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

June 25, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி

3

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தமிழக அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை

1

மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ. 2.47 லட்சம் கோடி! – வெள்ளை அறிக்கை வெளியீடு!

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்

namal

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு,

protest11

சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

June 25, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram

Yoshitha-Rajapaksa (1)

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

June 25, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல்

Ilangu

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

June 25, 2026

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம்

namal raja

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

June 25, 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்