வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது-வடக்கு மாகாண  ஆளுநர்

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (02.06.2026) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விசேட நிகழ்வும், கௌரவ ஆளுநரின் உரையும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளின் பின்னர் அதிதிகள் ஆலய வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
‘வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாவிகளும் பெருமளவில் வருகைதரும் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து வந்த மருதப்புரவல்லி இளவரசி, இங்குள்ள புனித தீர்த்தத்தில் (கீரிமலை ஊற்று) நீராடி தன் குறை நீங்கி, மாவிட்டபுரம் ஆலயத்தை எழுப்பி வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தகைய மிக நீண்ட பண்டைய வரலாற்றையும் புகழ்பெற்ற புனித தீர்த்தத்தையும் கொண்ட இந்த ஆலயத்துக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது வருகை தந்திருந்தார்.
இந்திய அரசு வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஏனைய வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றது. வடமாகாணத்தில் உள்ள மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்திய வீட்டு வசதித் திட்டத்தை நாம் எப்போதும் நன்றியோடு நினைவுகூர்வோம். இதன் மூலம் இன்று பல குடும்பங்கள் நல்ல உறுதியான வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடிகின்றன. நான் அந்தக் காலகட்டத்தில் முல்லைத்தீவில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதால் இதனை நேரில் கண்டு நன்கு அறிவேன். இந்திய அரசின் இந்த மகத்தான பங்களிப்பை வடபகுதி மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
இதுமட்டுமன்றி, ரயில்வே மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவின் பங்களிப்போடு நடந்துள்ளன. மேலும் சில மருத்துவமனைத் திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன.
கடல் அலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரம் ஆலயத்தின் குடிநீர்த் தேவைக்கு உங்களது ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த வரலாற்றுப் பூமியின் மேம்பாட்டுக்காக உதவும் இந்தியாவுக்கு, வடமாகாண மக்கள் சார்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு மக்களுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று ரீதியான உறவு தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். மன்னார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அபிவிருத்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
Walk-1

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 11, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

makkas

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

June 11, 2026

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு

sun

தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

June 11, 2026

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட

kaj

மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

June 11, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர்

KXQH3VQHQ565YO7OI3PWRRR3JU

ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக்

trump june 26

கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

June 11, 2026

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA /

calgary police

டெம்பிள் இல்லத்தில் பெண் மற்றும் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு: கால்கரி போலீஸ் தகவல்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் டெம்பிள் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து கால்கரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BAN6UJQJQVHRHJEZ3LBQDOOY6Y

கனடாவை ‘போர்வெறியர்’ என விமர்சிக்கும் ரஷ்யா; ட்ரோன் ஒப்பந்தத்திற்குப் பதிலடி கொடுக்கவும் சபதம்

June 11, 2026

உக்ரைனுடன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டதற்காகக் கனடாவை “போர்வெறியர்” (Warmonger) என்று மாஸ்கோ சாடியுள்ளதுடன், உக்ரைன் தலைநகர்

721702804_122296711556194641_7490025560383065704_n

குற்றவியல் சுற்றுலாவுடன் தொடர்புடைய பிஎம்டபிள்யூ (BMW) மோசடித் திட்டம்: இரண்டு ருமேனியர்களுக்கு வலைவீச்சு

June 11, 2026

கனடாவிலிருந்து சொகுசு வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, பிக்கரிங் (Pickering) வாகன விற்பனையகத்திலிருந்து போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அவற்றை

723067488_122296713872194641_4518704743392514271_n

பணப்பறிப்புத் தாக்குதல் சர்ரே வீடு இலக்கு: மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளுக்குத் தண்டனை

June 11, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே (Surrey, B.C.) நகரில் உள்ள ஒரு வீடு, துப்பாக்கிச் சூடு மற்றும் சிறிய தீ வைப்புச்

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் ஜனாதிபதி

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle