வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டில் அதீத ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றது. அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகச் செயற்படுவது மிகுந்த கவலைக்குரியது. உடனடியாக இவ்வாறான அதிகாரத்துவ முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட முன்வர வேண்டும், என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், யாழ்ப்பாணத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு மாகாணத்தை இலங்கையின் முதன்மைச் சுற்றுலா மையமாக மாற்றுவோம் என உறுதியளித்திருந்தேன். அதனைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களை மாகாணப் பணியகத்துக்குப் பரவலாக்க வேண்டும். குறிப்பாக, சிறிய அளவிலான சுற்றுலா விடுதிகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தையாவது மாகாணத்துக்கு வழங்குவது பணிகளைத் துரிதப்படுத்தப் பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோர் சுற்றுலாவிகளின் தற்போதைய மனநிலை மற்றும் முதலீட்டாளர்களின் ஏமாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
‘சுற்றுலாவிகள் வெறும் கடல் நீராடலுக்காக மட்டும் இங்கு வருவதில்லை. அவர்கள் சாகச விளையாட்டுகள் மற்றும் பல்வேறு புதிய பொழுதுபோக்கு அம்சங்களையே எதிர்பார்க்கின்றார்கள். மாலைதீவு போன்ற நாடுகளில் சிறு தீவுகளிலும் கடலின் நடுவிலும் குடில்களை அமைத்துச் சுற்றுலாவிகளை ஈர்க்கின்றார்கள். வடக்கிலும் அத்தகைய அற்புதமான சூழலும் தீவுகளும் உள்ளன. ஆனால், சுற்றுலா மையங்களை அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் நீண்டகாலத் தாமதங்கள் காரணமாக, ஆர்வத்துடன் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தச் சிவப்பு நாடா நடைமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகளால் மாகாணத்தின் சுற்றுலா வலையமைப்புத் திட்டங்கள் குறித்த விசேட முன்னளிக்கை செய்யப்பட்டது.
திட்டமிட்ட மற்றும் நிலையான முறையில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கருப்பொருள் உல்லாச விடுதிகளை உருவாக்கும் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ‘கருப்பொருள் சுற்றுலாத் தளங்களாக’ அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும், அதன் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்பது அதிகார சபையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

சுற்றுலா சார்ந்த முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் ‘ஒரே நிறுத்தச் சேவை’ பொறிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இவ்வாறான கருப்பொருள் உல்லாச விடுதிகள் திட்டங்கள் செயற்படுத்தப்படும்போது, ஏனைய அரச திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இலகுவாக்கப்படுவதுடன், அப்பகுதிகளில் சுற்றுலாவிகளின் வருகையும் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மன்னார் மற்றும் நெடுந்தீவில் இந்தத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அதிகார சபையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான ஆதரவையும் நிர்வாக ரீதியான உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

.

678567919_26014657621545951_2982044451263703780_n

பொருளாதாரத் தடையிலிருந்து புத்தகத் தடை வரை: தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து – கிளிநொச்சி ஊடக அமையம்

April 24, 2026

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

default (9)

கட்டினோ (Gatineau) வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

April 24, 2026

கியூபெக் மாகாணத்தின் கட்டினோ (Gatineau) நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒருவர்

canada police1

அலெக்ஸாண்ட்ரியாவில் வாகன விபத்து: 25 வயது இளம்பெண் படுகாயம்

April 24, 2026

ஒன்டாரியோவின் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) பகுதியில் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவரை வாகனம் மோதியதில் அவர் பலத்த காயங்களுக்கு

canada poli

பர்ஹேவன் (Barrhaven) கொலைச் சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் கைது

April 24, 2026

ஒட்டாவாவின் பர்ஹேவன் (Barrhaven) பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர்

HSWGNQTYHRDN7GXMW2PCPJ5LOE

”லவ் யூ மமா”: எட்மண்டன் தொண்டு நிறுவனத்தின் அன்னையர் தின நெகிழ்ச்சித் திட்டம்

April 24, 2026

எட்மண்டனைச் சேர்ந்த கலியோ கலெக்டிவ் (Kaleo Collective) என்ற தொண்டு நிறுவனம், எதிர்வரும் அன்னையர் தினத்தை முன்னிட்டு (மே 10)

034116b5-c0ca-4366-8630-a0e16d8eebe3

யாழ். உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளர்களுக்கு இளங்குமரன் எம்.பி வழங்கிய வாக்குறுதி

April 24, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு

678933459_122265107372059693_4641320959430003192_n

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல்

April 24, 2026

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர்

ZEWOPWWB4ZHL3CIYXLE5GCUMNA

அவர்களுக்கு நான் என் உயிரையே கடன்பட்டிருக்கிறேன்”: தீ விபத்தில் சிக்கியவரை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டு

April 24, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில், எரியும் வீட்டிற்குள் சிக்கியிருந்த ஒருவரைத் தமது உயிரையும் பொருட்படுத்தாது மீட்ட இரண்டு

TK74SVZPSRSOPP4YO4KV5LHNRU

தாயைக் கொன்ற மகனுக்கு ‘மனநோய்’ காரணமாகத் தண்டனையிலிருந்து விலக்கு: கனடா நீதிமன்றம் தீர்ப்பு

April 24, 2026

தனது 71 வயதுத் தாயை அடித்துக் கொலை செய்த பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் செய்த

4RXAYPSYWFYQ4AR4PTSJQUVA6U

கனடாவின் சிறந்த மதுபாக விடுதியாக வான்கூவரின் ‘கீஃபர் பார்’ (Keefer Bar) தேர்வு

April 24, 2026

வட அமெரிக்காவின் 50 சிறந்த மதுபாக விடுதிகளின் (North America’s 50 Best Bars) 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசை

T4KST5K4EJCHJHLTG3TYBIAADQ

சர்ரேயில் வசிக்கும் ஆபத்தான பாலியல் குற்றவாளி: பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

கனடாவின் சர்ரே (Surrey) நகரில் வசிக்கவுள்ள நதானியேல் ஓடோர்ஜன் (Nathaniel Odorjan) என்ற “அதிக ஆபத்துள்ள குற்றவாளி” (High-risk offender)

Screenshot_20260424_143852_YouTube

ரணில் இல்லத்திற்கு சி.ஐ.டி சென்றதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி