வடக்கு ஒன்டாரியோவில் உள்ள Ring of Fire சுரங்கத் திட்டம் கூட்டாட்சி அல்லது மாகாண அரசுகளால் அதிகாரப்பூர்வமாக விரைவுபடுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த வாரம் டொரொன்டோவில் நடைபெற்ற ஒரு சுரங்க மாநாட்டில் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், இந்தத் திட்டம் முழு வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறினார்.
ஆனால் அங்கே தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை என்று முதல் நாடுகள் ஒரு பிராந்திய மதிப்பீட்டில் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் இரண்டு First Nation சமூகங்களின் தலைவர்களுடன் தோன்றிய ஃபோர்ட், அந்தப் பகுதியின் சுரங்கத் திட்டங்களுக்கு அவசியமான சாலைகள் திட்டமிட்ட காலத்தை விட ஐந்து ஆண்டுகள் முன்பே முடிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆண்டின் ஜூலை மாதத்திற்குள் சாலை கட்டுமானம் தொடங்கும்; முதல் சாலைகள் 2030 இறுதிக்குள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இவை அனைத்தும், அந்தப் பகுதியில் திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கான மாகாண சட்டங்களைப் பயன்படுத்தாமல் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்தப் பகுதியில் உள்ள மற்ற 13 சமூகங்கள் இந்தத் திட்டம் குறித்து கவலை வெளியிட்டுள்ளன. அவற்றில் Neskantaga சமூகமும் ஒன்று. அவர்கள், அந்தப் பகுதியில் முன்மொழியப்பட்ட மிகப்பெரிய சுரங்கத் திட்டமான Eagles Nest குறித்து கூட்டாட்சி சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துமாறு கோரிக்கை வைத்திருந்தனர். இந்தத் திட்டத்தை ஆஸ்திரேலிய நிறுவனம்(Wyloo Metals)முன்வைத்துள்ளது.
ஆனால் கடந்த மாதம் Impact Assessment Agency of Canada அந்த கூட்டாட்சி ஆய்வு அவசியமில்லை என்று தீர்மானித்தது. அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள எளிய மாகாண ஆய்வை விட அதிக காலம் எடுத்திருக்கலாம்.
ஒரு அறிக்கையில், Wyloo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூட்டாட்சி அமைப்பின் இந்த முடிவு “எங்கள் சுரங்கத் திட்டம் மிகக் குறைந்த நிலப்பரப்பை மட்டுமே பயன்படுத்தும் வகையில் — ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக — வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று கூறினார்.