ரி20 போட்டி; பாகிஸ்தான் அபார வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ரி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி20 போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் இன்றைய தினமும் எதிர்பார்த்த பங்களிப்பினை வழங்காத நிலையில் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இலங்கை அணியின் சார்பில் ஜனித் லியனகே 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் பாகிஸ்தான் அணியின் மொஹமட் நவாஸ் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான வெற்றி இலக்கை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டியது.

பாகிஸ்தான் அணி சார்பில் சஹிபாஸ்டா பர்ஹான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் சார்பில் துஷ்மந்த சமீர 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ரி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதல் போட்டியில் வியாஸ்காந்த் 4 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

இந்த முத்தரப்பு தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளது.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது