ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் (intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த விஜயத்தின் போது இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸநலிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையை மதிப்பதாகக் கூறினார். இருப்பினும், சொந்தமாக எண்ணெய் கப்பல்களை  (Tankers) கொண்டுள்ள நாடுகளே இந்தச் சூழலில் பயனடைய முடியும் என்றும்  இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் விளக்குகையில்:“ரஷ்யாவுடன் அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று முயற்சித்து வருகிறோம். ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் வருகை இப்பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தார்.

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

girl

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

March 24, 2026

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும்

mali

ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

March 24, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான

ff

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

March 24, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால்

jeya

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த தனது விசேட அறையை மக்களுக்காக வழங்கிய ஜனாதிபதி

March 24, 2026

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட

sajith

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகிவிட்டது!

March 24, 2026

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு

pilot

ஏயர் கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

March 24, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏயர் கனடா ஜாஸ் (Air Canada Jazz) விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நியூயோர்க்கின் லாகார்டியா விமான

anura

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு!

March 24, 2026

இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய

Iran

போர்க்கப்பல் குறித்த ஈரானிய தூதுவரின் கருத்துக்கு அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு?

March 24, 2026

இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரானின் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்த

ind

இன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பிய நாள்; ராஜீவ்காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

March 24, 2026

ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய அரசாங்கத்தின் இராஜதந்திர அணுகுமுறையை, இலங்கையுடனான வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாஜக நாடாளுமன்ற