யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!

சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயம் அடைந்தவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குகின்றனர்.

இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் என சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி இருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

ஹணுகாவின் முதல் நாளில் யூத அவுஸ்திரேலியர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது தேசத்திற்கு இருண்ட தருணம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு அவுஸ்திரேலியர் மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத சம்பவம் என தெரிவித்த சிட்னி பொலிஸ் ஆணையர் மால் லெனின் பொலிஸார் புலனாய்வாளர்களுடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளர்.

இதேவேளை போண்ட பாயில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகம் கண்டிக்கிறது. அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் மற்றும் நியூ சவுத் வெல்ஸ் இமாம்கள் கவுன்சில்களும் கண்டனம் தெரிவித்துள்ளன .

இந்த வன்முறை மற்றும் குற்ற செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை பொறுப்பாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .

அதே நேரம் தாக்குதல் தொடர்பில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதரகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து மக்களை பாதுகாக்க அவுஸ்திரேலிய அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sambath

பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்கள்

December 15, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ்

un

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் – சிறுமிகளுக்கு அவசர உதவி

December 15, 2025

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் 8.3 மில்லியன்

sama

சாமரசம்பத் தசநாயக்க எம்.பிக்கு புதிய பதவி

December 15, 2025

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14.12.2025) சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்

kanth

இரண்டாவது முறையாக கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

December 15, 2025

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை

dd

படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

December 15, 2025

இராமநாதபுரம் – தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில்

id

இலங்கைக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும் இந்தியா

December 15, 2025

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 17 அத்தியாவசிய மருந்துகள் மற்றும்

gu

துப்பாக்கி சூட்டு சம்பவம்; பெண் ஒருவர் கைது

December 15, 2025

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்பெற்ற, அம்பலங்கொடை மோதர தேவாலய நிர்வாக குழுவின் தலைவர் வருசவிதான மிரந்தவின் கொலைக்கு உதவிய

col

கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் வெடிப்பு!

December 15, 2025

கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் எரிபொருள் பெருமளவு கடலில் கலந்துள்ளதாக இலங்கை கடல்சார்

namalR

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளோம் – நாமல் ராஜபக்ஷ

December 15, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும்

metr

அலை வடிவ காற்றழுத்த தாக்கம்; நாளையிலிருந்து மழை அதிகரிக்கும்

December 15, 2025

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம் காரணமாக நாளை 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை

MAke

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை; 17 வருடங்களின் பின் தண்டனை முடிவு

December 15, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள்

pe

200ற்கும் மேற்பட்ட ஆபத்தான கட்டிடங்கள் மகாவலி ஆற்றின் கரைகளில்?

December 15, 2025

மகாவலி ஆற்றின் இருபுறமும் (குறிப்பாக கண்டியில்) அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த பல பிரமுகர்களால் முறையான அனுமதிகள் இல்லாமல்