யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6 சந்தேகநபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 939 கடல் அட்டைகள், 2 டிங்கி படகுகள் மற்றும் முக்குளிப்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.