யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்ட களத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் குறித்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் (03), இன்றும் (04) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்படுகின்றது.
இதுகுறித்து ‘சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய அரசும் பொலிஸாரும் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு தங்களது காணிகளை திரும்பி கேட்பவர்களை தாக்குவதென்பது இனவாதத்தின் உச்சம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
By C.G.Prashanthan