சுதந்திர தினத்தையொட்டி இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் குறித்த 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.