யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் உதவித் திட்டம் தொடர்பில் ஒன்றாரியோவில் எதிர்க்கட்சிகள் அழுத்தம்

ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் (OSAP) ஃபோர்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய மாற்றங்களை திரும்பப் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குயின்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் (Grants) பெருமளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கடன்கள் (Loans) அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 85 சதவீதமாக இருந்த மானிய உதவி, இனி 25 சதவீதமாக குறைக்கப்படும். மீதமுள்ள 75 சதவீத நிதியை மாணவர்கள் கடனாகவே பெற முடியும். ஏழு ஆண்டுகளாக அமலில் இருந்த கல்விக் கட்டண முடக்கம் (Tuition freeze) நீக்கப்பட்டு, கட்டண உயர்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் பசுமைக் கட்சி (Greens) ஆகியன இன்று காலை இது தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தன: இந்த மாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, பழைய முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது.

மாணவர் கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய மாணவர்களுக்குத் திரும்பச் செலுத்தத் தேவையற்ற மானியங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கோருகிறது. இளைஞர் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள சூழலில், மாணவர்கள் பெரும் கடன் சுமையுடன் பட்டப்படிப்பை முடிக்க நாங்கள் விரும்பவில்லை,” என பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஷ்ரைனர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறை அமைச்சர் நோலன் குவின் (Nolan Quinn), தற்போதைய OSAP நடைமுறை “நீடிக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கல்வித் துறைக்காக மேலதிகமாக 6.4 பில்லியன் டொலா் நிதி ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த மாற்றங்கள் உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத கடன் சுமைக்கு மாணவர்களைத் தள்ளும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடைபெறவுள்ள “எதிர்க்கட்சிகள் தினத்தில்”, NDP மற்றும் லிபரல் கட்சிகள் இந்த விவகாரத்தை மீண்டும் சட்டமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

girl

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

March 24, 2026

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும்

mali

ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

March 24, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான

ff

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

March 24, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால்

jeya

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த தனது விசேட அறையை மக்களுக்காக வழங்கிய ஜனாதிபதி

March 24, 2026

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட

sajith

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகிவிட்டது!

March 24, 2026

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு

pilot

ஏயர் கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

March 24, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏயர் கனடா ஜாஸ் (Air Canada Jazz) விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நியூயோர்க்கின் லாகார்டியா விமான

anura

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு!

March 24, 2026

இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய

Iran

போர்க்கப்பல் குறித்த ஈரானிய தூதுவரின் கருத்துக்கு அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு?

March 24, 2026

இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரானின் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்த

ind

இன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பிய நாள்; ராஜீவ்காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

March 24, 2026

ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய அரசாங்கத்தின் இராஜதந்திர அணுகுமுறையை, இலங்கையுடனான வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாஜக நாடாளுமன்ற