மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் தீவிரம்

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதனால் டெங்கு பரவல் தொடர்பில் அடுத்த 2 வாரங்களும் மிகவும் அபாயகரமானவை என்றும் டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘தெரண பிக் ஃபோகஸ்’ (BIG FOCUS) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய டெங்கு பரவலின் அடிப்படையில், இந்த நிலைமை 2017 ஆம் ஆண்டை விடவும் அபாயகரமானதாக அமையக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் கொள்ளளவை மீறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே,

டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே இதற்கான அறிகுறிகள் எங்களுக்குத் தெரிந்தன.

இந்த மாற்றத்துடன் நிலைமை சாதகமாக இல்லை என்பதை எங்களால் உணர முடிந்தது.

மே, ஜூன், ஜூலை ஆகிய தென்மேற்குப் பருவமழை காலத்திலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய வடகிழக்குப் பருவமழை காலத்திலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலை வரும்போது, அதற்கு நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெப்பம் நிலவியது.

கடும் வெப்பம் நிலவும்போது டெங்கு நுளம்புகள் உருவாகும் வேகம் குறைவாகவே இருக்கும்.

பல்வேறு நாடுகளில் மூன்று டெங்கு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைக்கு இதைக் கொண்டுவருவதாக இருந்தால், நாங்கள் நிறைய விடயங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதைக் கொண்டுவந்தாலும், இது தொற்றுநோயைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது. இது உண்மையில் இரண்டு டோஸ்களைக் கொண்ட தடுப்பூசியாகும்.

ஒரு தடுப்பூசி வழங்கப்பட்ட பிறகு, அது செயல்படக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். ஏற்கனவே ஒருமுறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, இந்தத் தடுப்பூசியின் செயல்பாடு மிகச் சிறந்ததாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது

cru oil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

July 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா