முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தால் ஏற்படும் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார். எனவே நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய பல்துறைசார் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் என சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள்; விலையைக் குறைத்துள்ளன. ஆனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியமை, தரம் குறைந்த நிலக்கரி மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை போன்ற கின்னஸ் சாதனைகள் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையே சேரும்.

பெப்ரவரி 28 முதல் மே 31 வரையிலான காலப்பகுதியில், உலகிலேயே மிக அதிக சதவீதத்தில் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்திருப்பது இலங்கை அரசாங்கமாகும். இதன் மூலம் டீசல் 13.9 சதவீதத்தாலும், பெற்றோல் 127.6 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியுள்ளன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திலுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட எரிபொருள்; விலையைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு அதன் பலனை வழங்கியுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே எரிபொருள்விலை அதிகரித்தது என்று அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட சுமார் 100 பில்லியன் டொலர் இழப்பு, அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணங்களாகும்.

உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை இதனாலேயே ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே எம்மால் சேமிக்க முடியும் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் அதற்கு முந்தைய வாரங்களில் உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைவாக இருந்த போது ஏன் விலையைக் குறைக்கவில்லை? எனவே, ஜனாதிபதிக்கோ அல்லது மின்சக்தி அமைச்சருக்கோ எரிபொருள்விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லை.

தற்போது அரசாங்கம் சில நிறுவனங்களின் மாஃபியாக்களிடம் சிக்கியுள்ளதுடன், அதிக விலைக்கு எரிபொருள்; வாங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. காஞ்சன விஜேசேகர அமைச்சராக இருந்தபோது நிறுவனங்களின் தரகுப் பணம் அவரது சட்டைப் பைகளுக்குள் செல்வதாக ஜனாதிபதி கூறினார். தற்போது அந்த சட்டவிரோத இலாபம் யாருடைய சட்டைப் பைக்கு அல்லது எந்தக் கணக்கிற்குச் செல்கிறது என்பதை ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்த கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் விலை மற்றும் வரிகளை அதிகரிக்க உடன்பாட்டை தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அரசாங்கம் நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்துள்ளது. நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சரியான பார்வையான திறமையோ இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார். நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பார். மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் தற்போது பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதனை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னாயத்தங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அன்றாட நிலைமைக்கு ஏற்பவே தற்காலிகமாகச் செயற்படுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இதற்குப் பொருத்தமான ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் இருக்கும் அனுபவமிக்க அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைக் கையாள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு