முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ மீது பாய்கிறதா உரிமை மீறல் நடவடிக்கை?

சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுங்கட்சி அமைச்சர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவையின் உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டு அதிரடி முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடந்த இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்ஜெட் விவாதமும்.. வெடித்த சர்ச்சையும்:
சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தவெக அரசின் பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்தார். “இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் இருப்பது போன்று தெரிகிறது, ஆனால் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. இதைத்தான் ‘கானல் நீர்’ என்பார்கள். மண்புழு உரம் தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளீர்கள்; இது கடந்த திமுக ஆட்சியிலும் ஒதுக்கப்பட்டதுதான். மாற்றம் என்று கூறிய இந்த அரசு எவ்வித மாற்றத்தையும் தரவில்லை” என்று விமர்சித்தார். மேலும், “இந்த அரசு என்னைச் சிறையில் அடைத்தது. தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நான் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளேன்” எனவும் பேசினார்.
குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்துச் சட்டப்பேரவையில் பேசக்கூடாது. முதலமைச்சர் குறித்து மார்க்கண்டேயன் தரக்குறைவாகப் பேசியதால்தான் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று பதிலடி கொடுத்தார்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனின் காட்டமான அறிவுரை:
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மார்க்கண்டேயன் பேரவையில் சிறப்பாகவே பேசுகிறார். ஆனால், பொதுவெளியில் அவர் பேசிய வன்முறை மற்றும் அவதூறு பேச்சுகள் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் புகார் கடிதம் கொடுத்துள்ளனர். ஆபாசமான, வன்முறையைத் தூண்டும் பேச்சுகளால் என்ன சாதிக்க முடியும்? நாம் பேசுவதை வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்; அவர்கள் ஏற்றுக் கொண்டால், உங்கள் மனசாட்சி அதற்குப் பதில் சொல்லட்டும்! இந்தியாவே தமிழ்நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற அருவருக்கத்தக்கப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்” எனக் காட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், “இதுகுறித்து உரிய விசாரணை நடத்த, அவையின் உரிமை மீறல் குழு அமைக்கப்படும். அக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலும், உறுப்பினரிடம் விளக்கம் கேட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனச் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
எ.வ.வேலுவின் எதிர்ப்பு மற்றும் சபாநாயகரின் இறுதிப் பதிலடி:
சபாநாயகரின் இந்த முடிவுக்கு திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். “பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதற்காகக் காவல்துறை ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் அதை விசாரித்துத் தண்டனை வழங்கும். சட்டப்பேரவையில் தவறாகப் பேசியிருந்தால் மட்டுமே உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப முடியும். ஒரே பிரச்சனைக்குக் காவல்துறை, சட்டப்பேரவை என இரண்டு இடங்களில் தண்டனை வழங்குவது என்பது இல்லாத ஒன்று; இதனைப் பேரவைத் தலைவர் பரிசீலிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுவெளியில் சட்டப்பேரவையையும், முதலமைச்சரையும் பற்றித்தான் அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து விசாரிக்க எனக்கு முழு உரிமை உள்ளது!” என ஆணித்தரமாகத் தெரிவித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
#Markandeyan #DMK #ThalapathyVijay #ChiefMinisterVijay #TVKGovernment #TNAssembly #JCDPrabhakar #EVVelu #AadavArjuna #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNPolitics #PoliticalUpdatesTN
go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான