மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கனகர் கிராம மக்களின் காணியினை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து மீட்டுத் தருமாறு கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான ஐந்து வருட போராட்டத்தை தொடர்ந்து கனகர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் 202 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாக இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசு விடுவித்த கனகர் கிராம மக்களின் காணியை பகிர்ந்தளிப்பதற்காக 202 பேர்களுடைய பெயர் விபரம் பரிந்துரைக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இருந்த போதிலும் 2023 ஆண்டு அதில் 73 குடும்பங்கள் முதல் கட்டமாக குடியமர்த்தபட்டுள்ளதாகவும் மீதியாக உள்ள எமக்கு குடியிருப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

எனவே அரசாங்கம் விடுவித்த எமது காணியில் நாம் மீள் குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியுடன் அரசாங்கம் விடுவித்த எமது காணியை எமக்கு கையளிக்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எமது காணி எமக்கு வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோசங்களோடு முன்னெடுத்த இந்தப் போராட்டம் 23.03.2026 நேற்று காலை 10 மணியில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் பொத்துவில் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கையளித்திருந்தனர்.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.