உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முழுமையான பங்களிப்புடன் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு நிர்மாணப் பணிகளின் போது இப்பிரதேச மக்களில் சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, தம்புள்ளை, இப்பன்கடுவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் பல சமூகநலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதோடு, ஜனாதிபதி அடையாள ரீதியாக இந்நிகழ்விலும் கலந்துகொண்டார்.