மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணை

முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 \ 2இன் கீழ் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதனால் ஜனவரி 9 ஆம் திகதி சுகாதார அமைச்சரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு, சிலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அந்த சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் 2025 டிசம்பர் 21ஆம் திகதியன்று இரவு 7.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர் அந்த சிறுமியை சிறுவர் வாட்டுக்கு மாற்றாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கே மாற்றியுள்ளார். 5 நிமிடங்களில் அவரை அங்கு அனுமதித்துள்ளார்.

இந்த வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலை பிரிவுக்குள் உட்பட்டது. அதன் பணிப்பாளர் அன்றைய தினத்தில் விடுமுறையில் இருந்தார். குறித்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிய பின்னர் சிறுவர் பிரிவில் இருந்த சிறுவர் வைத்தியர் ஒருவர் அந்த சிறுமியை பரிசோதித்துள்ளார். அதன்போது சிறுமிக்கு உணவு ஒவ்வாமை அறிகுறிகள் இருந்துள்ளது. பரிசோதனைகளுக்கமைய சிறுவர் பிரிவு வைத்தியர் பரிந்துரைத்த சிகிச்சை சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டதிட்டங்களுக்கமைய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகம் ஊடாக விசாரணைகள் இடம்பெறுவதுடன், இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர் விளக்கமான அறிக்கை முன்வைக்கப்படும்.

இதேவேளை மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமியின் மரணம் தொடர்பில் மரண பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த பரிசோதனையின் மாதிரி அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் மேலும் விடயங்களை முன்வைக்க முடியும் என்றார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது