மாகாண சபைத்தேர்தலை வலியுறுத்தி ஆறுகட்சிகளுடன் இணைந்து செயற்பாடு; அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு எதிராக கூட்டுச்செயற்பாடு: தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பில் தீர்மானம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வருகின்மையை தீவிரமாக கவனத்தில் கொண்டு  பொது தளத்தில் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதற்கு எதிராக அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞனத்தின் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணி வரையில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் நாகலிங்கம் இட்ணலிங்கம் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

சுதந்திர இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்து வாழ்வதற்கு விலக்கப்பட்டதன் காரணத்தால் தான் தனிநாடு என்ற கோரிக்கை எழுந்தது. ஆகவே பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு மீளப்பெறாதவகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மிக அடிப்படையான கோரிக்கையாக உள்ளது. அந்தவகையில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான விடயங்களை அடுத்த தலைமுறையினருக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் எடுத்துரைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

தற்போதைய நிலையில் கல்வி, சுகதாரம் என்பன மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். காணி,பொலிஸ் ஆகிய அதிகாரங்களைக் கோரும் நாங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்கு துணைபோக முடியாது.

குறிப்பாக தேசிய பாடசாலை தேசிய வைத்தியசாலை என்ற போர்வையில் அதிகாரங்கள் மீளப் பெறப்படுவதற்கு துணைபோக முடியாது. அதிகாரங்கள் பற்றிய விளக்கமில்லாது தேசிய பாடசாலையாக இருந்தால், தேசிய வைத்திய சாலையாக இருந்தால் எமக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து செயற்படுபவர்களுக்கு உரிய விளக்கங்களை வழங்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், நீண்டகாலப் போராட்டத்தின் அடிப்படையில் எமக்கு கிடைத்த மிகச்சிறிய அதிகாரங்களையும் மீண்டும் மத்தி பெற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எவரும் துணைபோகக் கூடாது என்பதை பகிரங்கக் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

அதேநேரம் ஆறுகட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ள. அந்த தளமானது, நாட்டின் மொத்த சனத்தொககையில் 25சதவீதமான மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்க்கட்சிகளின் பொதுத்தளமாகும். அந்த தளமானது மக்களது விடயங்களில் இணங்கும் விடயங்களை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கானதாகும்.

அதனடிப்படையில், புதிய அரசியலமைப்பு, காணிப்பிரச்சினை, மாகாண சபைத்தேர்தல் விடயங்களை குறித்த கூட்டணி முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பில் குறித்த ஆறுகட்சிகள் ஒன்றிணைந்த தளத்தைப் பயன்படுத்தி அவ்விடயங்களை கொழும்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து எடுத்துரைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடயங்களை ஆறுகட்சிகளின் கூட்டுத்தளத்தில் அதனை வெளிப்படுத்தவுள்ளேன்.

இதேநேரம் நானும், சாணக்கியனும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து உரையாடியுள்ளோம். அந்தவகையில் அவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் செய்து மந்திரிமனை உள்ளிட்ட விடயங்களை பார்வையிட்டுள்ளார். மந்திரிமனை தொடர்பில் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

அதேபோன்று குருந்தூர் மலை விவகாரம் உள்ளிட்ட விடயங்களும் உரையாடப்பட்டுள்ளன. குருந்தூர் மலை விடயத்தில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டளையும் அவரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொல்லியல் திணைக்களத்தை மையப்படுத்தி எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பலனாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்குள் சில அதிகாரங்கள் கிடைத்துள்ளன. அவை பற்றாக்குறையாக இருந்தாலும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கும் செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது என்று சகலருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பளை வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளை மத்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகளாகும். அதேபோன்று தேசிய பாடசாலையின் பெயரால் பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அவ்வாறான அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய பாடசாலைகளின் பெயரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலைகள் எவையும் அவ்விதமான வகைக்குள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை.அவற்றை மாகாணம் கையாள்வதற்கான சுற்றிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்பார்த்துள்ளோம்.

அவ்விதமான நிலையில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என்று எவரும் அதிகாரங்கள் மீள மத்திக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும்.

தற்போது ஆறுகட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அந்த அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக பொதுவான விடயங்களின் ஒன்றிணைந்து செயற்பாடவே எதிர்பார்த்துள்ளன. அதனை நாங்கள் வரவேற்றுள்ளோம். அந்தவகையில் அதிகாரங்கள் மீளப்பெறப்படுத்தல், ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு தொடர்ச்சியான எடுத்துரைப்புக்களைச் செய்வதற்கு குறித்த கட்டமைப்பு செயற்படவுள்ளது.

மேலும் ஆறுகட்சிகள் கூட்டணியானது, செயற்படுத்தக்கூடிய விடயங்களையே முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

கேள்வி: ஆறுகட்சிகளின் இணைவு சம்பந்தமாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளனவே?

சுமந்திரன்: கட்சிகள் கூட்டாகச் செயற்படத் தீர்மானத்தாலும் கேள்விகள் உள்ளன. தனியாகச் செயற்பட்டாலும் கூட்டாகச் செயற்படவில்லை என்ற கேள்விகள் உள்ளன. எவ்வாறாக இருந்தாலும், பொதுமக்களின் விடயங்களில் இணங்கிச் செயற்படக்கூடிய விடயங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்