மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான நிர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தொடர் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க ‘மலையகம் அரசியல் அரங்கம்’ தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை மலையகம் அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.
மலையகம் அரசியல் அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக ஆர்வலர் நல்லக்கண்ணு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகச் சந்திப்பில் திலகராஜா மேலும் தெரிவிக்கையில்:
“அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை பதுளையில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். எனினும், ‘தித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. இதேவேளை, அனர்த்தச் சூழலைப் பயன்படுத்தி நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரை நோக்கி மாற்றிய அரசின் நடவடிக்கை, நுவரெலியாவின் நிர்வாக அதிகாரப் பகிர்வை மீண்டும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.”
2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கக் கோரப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டமாக 5 செயலகங்களையும், எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னர் எஞ்சிய 5 செயலகங்களையும் அமைக்க அப்போதைய உள்விவகார அமைச்சரால் உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் 2025 ஆகஸ்ட் மாதம் புதிய எல்லை மீள்நிர்ணயக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், அக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
1. நோர்வூட் பிரதேச செயலகம், .
2. , ராகலை நகருக்கு .
3.ஹட்டன் .
4.மஸ்கெலியா .
5.அக்கரப்பத்தனை .
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மலையகமெங்கும் தொடர் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.