மருத்துவ பீட மாணவி காதலனுக்காக போதைப்பொருள் கடத்தினார்?

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.

அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவரின் முகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், “இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் சிறையில் இருக்கிறார்” என்ற கேள்வி பலரும் எழுப்பி வந்தனர்.

குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்த அவர், கல்வியில் மட்டுமல்லாது வலைப்பந்து விளையாட்டிலும் தேசிய மட்டம் வரை பல விருதுகளைப் பெற்று, பாடசாலை மாணவர் தலைவியாகவும் (Prefect) மிளிர்ந்துள்ளார்.

அவரது உயர்தரப் படிப்பு காலத்தின் போது, தோழிகளுடன் ஏற்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) குழுவொன்றின் ஊடாக ஒரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அது பின்னர் தீவிர காதலாக மாறியுள்ளது.

அந்தக் காதலை அப்பெண் கண்மூடித்தனமாக நம்பிய நிலையில், காதலன் அவரிடம் நீர்கொழும்பில் உள்ள தனது நண்பரிடம் இருந்து சில பொதிகளை பெற்று வருமாறு கேட்டுள்ளார்.

காதலன் மீதிருந்த அதீத நம்பிக்கையால், அந்தப் பொதிகளுக்குள் இருப்பது போதைப்பொருள் என்பதை அறியாமலேயே, அதனைப் பல இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் கடத்தலில் அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

இறுதியில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த பெண் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்கொழும்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைக்குள் இருந்த போதே, அவரது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர் அதீத புள்ளிகளைப் பெற்று மருத்துவப் பீடத்திற்குத் (Medical Faculty) தெரிவாகியிருந்த தகவல் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி நின்று தனது உரிமைக்காகக் குரல் கொடுத்த அந்த மாணவியின் சோகக் கதை, தற்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் எடுத்துக் காட்டப்படுகின்றது.

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

ne

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.