மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மாநாடு – இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு

ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற 151வது அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாத்தல், பல்தரப்பட்ட உறுதிப்பாடுகளை வலுப்படுத்தல், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதிலளிப்பை உறுதிசெய்தல் என்பவற்றில் பாராளுமன்றங்களின் பங்கு குறித்து கலந்துரையாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சட்டவாக்க உறுப்பினர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

விவாதத்தின்போது உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வடகல, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்தில் இலங்கையின் அனுபவத்தை சுட்டிக்காட்டினார். 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வை இலங்கையின் மீள்தன்மை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பின் இன்றியமையாத பங்கினை அடிக்கோடிட்டுக் காட்டிய ஒரு தருணமாகக் குறிப்பிட்ட அவர், தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் மனிதாபிமான நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“காலநிலை மற்றும் சுத்தமான காற்றுக்காக மீத்தேன் வாயுவைக் குறைத்தலுக்கான தகுந்த கவனம் கிடைக்கிறதா?” என்ற தலைப்பிலான செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் கலந்துகொண்டார். அவர் தனது கருத்துக்களில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கார்பன் பூஜ்ஜியம் 2050 வழிகாட்டி மற்றும் மூலோபாயத் திட்டம், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் போன்ற தேசிய முயற்சிகளையும், 2050ஆம் ஆண்டளவில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான நாட்டின் உறுதிமொழியையும் அவர் எடுத்துரைத்தார். அபிவிருத்தி மற்றும் தலைமுறைக்கு இடையேயான பொறுப்பு குறித்த தேசத்தின் நோக்கை இலங்கையின் சுற்றாடல் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பு, இடம்பெயர்வு, காலநிலை பற்றிய நடவடிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த இலங்கையின் நிலைப்பாடுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மாநாட்டின் அங்கமாக இடம்பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் (ASGP) அமர்வுகள் மற்றும் தொடர்புபட்ட கூட்டங்களில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர கலந்துகொண்டார்.

இலங்கைக் குழுவினர், பெலாரஸ் குடியரசின் தேசிய சபையின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான நிலைக் குழுவின் தலைவர் செர்ஜி அலெனிக்கையும் சந்தித்தனர்.

குறிப்பாக மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உயர்மட்டப் பரிமாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை