மனிதக் கட்டுப்பாட்டை மீறும் ஆயுதங்கள் குறித்து பாப்பரசர் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, உலக நாடுகள் அதனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அது தவறான தகவல்களைப் பரப்பி, உலகை முடிவற்ற மகா யுத்தத்திற்குள் தள்ளும் எனவும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான பாப்பரசர் 14 ஆம் லியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாப்பரசரான லியோ, வத்திக்கானில் திங்கட்கிழமை வெளியிட்ட தனது முதலாவது பிரதான போதனை ஆவணமான ‘மக்னிஃபிகா ஹியுமனிடாஸ்’ (Magnifica Humanitas – மகத்தான மனிதநேயம்) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் 1.4 பில்லியன் உலகளாவிய உறுப்பினர்களுக்கான உயர்மட்ட போதனையாகக் கருதப்படும் இந்த ஆவணம், சுமார் 43,000 வார்த்தைகளைக் கொண்டு, கடந்த ஓராண்டு கால உழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் நடைபெற்ற இந்த ஆவண வெளியீட்டு விழாவில், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic – கிளவுட் AI தயாரிப்பாளர்கள்) நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ் ஓலா கலந்துகொண்டார்.

இவ்விழாவில் உரையாற்றிய பாப்பரசர் லியோ,

சில தன்னாட்சி ஆயுத அமைப்புகள் தற்போதே மனிதக் கட்டுப்பாட்டையும் தாண்டி வளர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலை வெளியிட்டார். அத்துடன், உயிர்களைப் பறிக்கும் எந்தவொரு இறுதி இராணுவத் தீர்மானங்களையும் ‘செயற்கை நுண்ணறிவு’ அமைப்புகளிடம் ஒப்படைப்பது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று எனவும் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீதான போரைத் தீவிரமாக ஆதரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை அண்மைக்காலமாக பாப்பரசர் லியோ கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது நிர்வாகத்தின் கோபத்திற்கு பாப்பரசர் ஆளாகியுள்ளார்.

ஐந்தாம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையினால் போர்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘நியாயமான போர்’ என்ற பாரம்பரியக் கோட்பாட்டை இச்சுற்றறிக்கை மூலம் பாப்பரசர் லியோ நிராகரித்துள்ளார்.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உட்பட ட்ரம்ப் நிர்வாகத்தினர் ஈரானுடனான போரை நியாயப்படுத்த இக்கோட்பாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். “எந்தவொரு போரையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ‘நியாயமான போர்’ கோட்பாடு இப்போது காலாவதியாகிவிட்டது” என பாப்பரசர் லியோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேலும், சில உலகத் தலைவர்கள் தங்களது உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே போர்களைத் தொடங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில்துறை புரட்சியின் போது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தனது முன்னோடி பாப்பரசர் 13 ஆம் லியோவின் போதனைகளை நினைவு கூர்ந்த பாப்பரசர் 14 ஆம் லியோ, தற்கால தொழில்நுட்ப உலகில் உருவாகியுள்ள புதிய வடிவ கடுமையாகச் சாடியுள்ளார்

கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான அரிய பூமித் தனிமங்களை அகழ்வதற்காக, உலகின் சில பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் அபாயகரமான சுரங்கங்களில் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

“தொழில்நுட்ப ஓட்டம் தடையின்றித் தொடர்வதற்காக இந்த ஏழை மக்களின் உடல்கள் காயங்களுக்கும் சிதைவுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இது நம் காலத்தின் மனச்சாட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்” என பாப்பரசர் உருகமுடன் தெரிவித்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி