மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையையே முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்!

“திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்,” என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்த நிலையில், அதற்குப் பதிலடியாக இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும், சமூக நீதிக்கான தொகுதி வரையறை மசோதாவை கருப்புச் சட்டம் என்று அவதூறு பேசி, எதிர்ப்பு தெரிவித்து தீயிட்டுக் கொளுத்தும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 மே 4-ம் தேதி அன்று தீய சக்தி திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து மக்கள் அகற்றப் போகின்றதை முன்னிட்டு, திராவிட மாடல் திமுக ஆட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக – தாங்களே தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தங்களுக்கு தாங்களே பிரியா விடை கொடுக்க கோலங்கள் போட்டு பிரிவுபச்சார விழாவை கனத்த இதயத்துடன் தமிழகம் முழுக்க நடத்தி வருவதைப் போல் இந்த கருப்புக்கொடி காமெடி கண்ணீர் தீ போராட்டம் அமைந்துள்ளது.

திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிராக கோலங்கள் போட சொல்லி, நாடகங்கள் நடத்துகிறார்.

திமுகவிற்கு எதிரான மக்களின் கடும் கோபத்தை, அதிருப்தியை, தேர்தல் நாளன்று அமைதிப் புரட்சி செய்ய காத்திருப்பதை, திசை திருப்ப, ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்பது போல தீ கருப்புக் கொடி கோலங்கள் என பிசுபிசுத்துப் போன தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி, ஆட்சிப் பறிபோகிறதே என்ற ஆத்திரத்தில், பதட்டத்துடன், அச்சத்துடன் அமைதியின்றி தவிக்கிறார்.

பாஜக மீண்டும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுத்தே தீர வேண்டும் என்கிற தீய நோக்குடன், ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை பாஜகவினர் மாற்றி விடுவார்கள் என திமுக, காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்தது போல, இப்போது சமூக நீதிக்கான தொகுதி மறுவரையறை மசோதாவை வைத்து அவதூறு அரசியல் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று கருப்பு கொடி போராட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோலங்கள் போட்டு எதிர்ப்புகளை காட்டுங்கள் என்று தமிழக பெண் சமுதாயத்தை தூண்டிவிட்டு, தமிழ் தமிழர், தமிழகத்தை வாழவைத்த, வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பும் சதி திட்டத்திற்கு தமிழக பெண்கள் துணை போக மாட்டார்கள்.

‘சேலம் என்றாலும் ஸ்டீல்; ஸ்டாலின் என்றாலும் ஸ்டீல்’ என்று துருப்பிடித்த இரும்பாக திராவிட மாடல் ஆட்சியும் தானும் மாறி போனாலும், அழகான ஒப்பனையில், துக்ளக் பாணியில், நீட் ரகசியம் போல நம்ப முடியாத, செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளை ப்ளாப் ஸ்டார் (Flop Star) திமுக தேர்தல் அறிக்கையை – சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை என்று கூச்சம் இல்லாமல் பொய் சொல்கிறார்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் திராவிட மாடல் அப்பா பேசுகிறேன் என்று தேன் தடவுவது போல பேசி, அடுக்கடுக்காக பொய்கள் கூறி, தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளித் தந்து, மக்களை ஏமாற்றி விடலாம் என்ற இறுமாப்புடன் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கள், ஆசை வார்த்தைகள், உயிரைப் போக்கும் புதைகுழிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

எனவே பெண்களுக்கான 33 சத வீதம் இட ஒதுக்கீட்டை இதற்கு முறையை நோக்கத்திற்காக, தொகுதி வரையறை மசோதாவுக்கு எதிராக திமுக நடத்தும் முகமது பின் துக்ளக் நாடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீய சக்தியை திமுகவை வீழ்த்தி வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைப்பார்கள்.

இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்காகவும் நரேந்திர மோடி அரசு எடுக்கும் நல்ல செயல்பாடுகளை, மக்கள் விரோத காங்கிரஸ், திமுக, இண்டியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கடந்து மக்கள் ஆதரவுடன் பாஜக நிறைவேற்றும்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ur

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

April 17, 2026

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று

heat

உச்சம் தொடும் வெப்பம்

April 17, 2026

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என

le

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

April 17, 2026

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள்

ben

லக்னோவை வென்ற பெங்களூர்

April 17, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Cana_Ard

கனடாவால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது ஆர்டெமிஸ் II – விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன்

April 17, 2026

நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவுப் பயணத்தில் தனது பங்களிப்பானது, கனடா ஒரு நாடாக

6

அம்ஹெர்ஸ்ட் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

April 17, 2026

நோவா ஸ்கோடியா (N.S.), அம்ஹெர்ஸ்ட் நகரில் இந்த வார தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர்

le

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!

April 17, 2026

இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. கால எல்லை: இந்த

ci

சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது அவதூறுப் பரப்புரை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு

April 17, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக

thva

வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – தவபாலன்

April 17, 2026

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய

ra

இன்றும் மழை

April 17, 2026

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே

arrest

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

April 17, 2026

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட

lal

விவசாய அமைச்சர் லால்காந்தவிற்கு 6.7 கோடி பெறுமதியான சொத்துக்கள்!

April 17, 2026

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து