மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்து அரசாங்கம் தற்போது டீசலை இறக்குமதி செய்கிறது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தனது ஊழல்களை மறைக்க பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்று வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்பவர் ‘மாலிமாவ’வின் கட்டளைக்கு இணங்கச் செயல்படுகிறாரா அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த காலத்தில் எமது அரசாங்கம் கொண்டு வந்த காற்றாலை மற்றும் எல்.என்.ஜி மின் திட்டங்களை இவர்கள் எதிர்த்தார்கள். அன்று அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாட்டு மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அமெரிக்காவின் USAID போன்ற நிறுவனங்கள் பிராந்தியத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு நிதி வழங்கியதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது ஒரு சர்வதேச இரகசியம். இவ்வாறான சக்திகளின் தேவையை நிறைவேற்றவே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் பயனை அரசாங்கம் உடனடியாகப் பெற வேண்டும். குறிப்பாக துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிச் சேவைகளுக்கான சிறந்த மாற்றாக கொழும்புத் துறைமுக நகரை மாற்ற இதுவே சரியான தருணம்.

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்க தொடர்ந்தும் ராஜபக்ஷக்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

Canada

ஈரான் புரட்சி; கனடாவில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமகால நிகழ்வை நினைவுபடுத்திய செய்திகள்

March 22, 2026

ஈரானில் ஏற்பட்ட கலக்கம், உலக எண்ணெய் சந்தைகளில் பெரிய பாதிப்பு, கனடாவிலும் அதன் அப்பாற்பட்ட பகுதிகளிலும் வானளாவிய பெட்ரோல் விலைகள்—2026

Inkaran

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது?

March 22, 2026

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன்

Nilan

இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலப்பரப்பை வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

March 22, 2026

தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை

sman

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

March 22, 2026

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும்

Ali

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது – அலி சப்ரி

March 22, 2026

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது

lan

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

March 22, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை

auto

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

March 22, 2026

பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர

NAMAL

மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

March 22, 2026

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக்

Surya

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

March 22, 2026

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம்

vij

விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

March 22, 2026

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும்

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

kal

பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

March 22, 2026

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ்