இலங்கையைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த கடற்றொழில் படகு, மாலைத்தீவு கடலோர பொலிஸாரால் மறிக்கப்பட்டு குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடறபடை வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மாலைத்தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
‘ஹிபலே மல்லி’ என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்புள்ளதாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.