பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்கள்

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நிலையற்ற உலகளாவிய சூழல் உருவாகியுள்ள நிலையில், சிறிய அளவிலான திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையின் பொருளாதாரத் துறைகள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளன.

எனவே, இலங்கையைப் பாதிக்கும் எதிர்பாராத அபாயங்கள் தொடர்பாக விரைவான மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தல், சந்தை நிலைமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக உரிய நேரத்தில் விரைவான தலையீடுகளைச் செய்வது அத்தியாவசியமாகியுள்ளது.

அதற்கமைய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து, உலகளாவிய நிலையற்ற தன்மையினால் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பான பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 4 குழுக்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் தலைமையிலான வலுசக்தி குழு எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி விநியோகத்தை நிலையாகப் பேணுவது தொடர்பான அவசர கொள்வனவுகளுக்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, விநியோக ஆதாரங்கள் மற்றும் புதிய விநியோகஸ்தர்களைக் கண்டறியும் பணிகளில் ஈடுபடும்.

பிரதமர் தலைமையிலான அரச சேவையை முறையாகப் பேணுவதற்கான குழு அரச சேவையைத் தொடர்ச்சியாகவும், திறமையாகவும், முறையாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கும் பொருளாதார நடவடிக்கைகளைப் பேணுவதற்கும், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் தலைமையிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கான குழு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதன் மூலம் பொதுமக்களுக்குச் சந்தையில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு வலுவூட்டல் மற்றும் சமூக விவகார அமைச்சரின் தலைமையிலான பல்வேறு சமூக அடுக்குகளின் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு அன்றாட மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து, உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு விரைவான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

sene

சம்பியனாக மொராக்கோ

March 18, 2026

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக மொராக்கோ பிரகடனப்படுத்தப்பட்டதுடன், செனகலின் பட்டமானது தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான மேன்முறையீட்டையடுத்து ஆபிரிக்க

drug

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் 1 200 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

March 18, 2026

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப்

wre

அமெரிக்காவினல் அமைச்சராக மல்யுத்த வீரர்

March 18, 2026

அமெரிக்காவின் மிக முக்கிய துறையான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிறிஸ்டி நோம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் சமூக வலைதள

rain

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை

March 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை

child ab

12 வயது சிறுமி வன்புணர்வு: சிப்பாயும் மனைவியும் கைது

March 18, 2026

12 வயதுடைய சிறுமி ஒருவரை, அவர் 10 வயதாக இருக்கும் காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியான பாலியல்

Cabinet de

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்கள்

March 18, 2026

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும்

Mujibar Rahuman

நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

March 18, 2026

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும்

rail

புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

March 18, 2026

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும்

bima

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

March 18, 2026

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு

Gotta

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

March 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,