பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், “சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசாங்கம் இதனை ஒரு சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கை எனக்கூறி நியாயப்படுத்த முயல்கின்றது.

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஆளுங்கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதத் தவறும் நடக்கவில்லை எனக் கூறி அரசாங்கத்தைப் பாதுகாத்தனர். ஆனால், அன்று நாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள் இன்று மக்கள் முன்னிலையில் நிரூபணமாகியுள்ளன.

நிலக்கரி கொள்வனவு நடைமுறையில் பாரிய முறைகேடுகள் காணப்படுவதாகத் தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழலை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த இரண்டு வருடங்களாகப் பழைய ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது இவர்களது முதலாவது நிலக்கரி டெண்டர் சர்ச்சைக்குள்ளானதும், 2009 ஆம் ஆண்டு முதல் விசாரிக்க வேண்டும் எனக் கூறுவது முறையற்றது” என்று குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயாராக இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “தாம் தலைமைத்துவத்திற்குத் தகுதியானவர் என்று கூறுவதற்கு நாமல் ராஜபக்சவுக்கோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள எவருக்கும் உரிமை உண்டு.

எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு என ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது. இறுதியில் யார் தகுதியானவர் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அரசாங்கம் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை விடுத்து, வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று லசந்த அழகியவண்ண இதன்போது வலியுறுத்தினார்.

Dead

உழவியந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி!

April 19, 2026

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்

Ann

உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!

April 19, 2026

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம்

mar'

மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

April 19, 2026

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ்

t

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! – தமிழரசுக் கட்சி கடும் சீற்றம்

April 19, 2026

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது

tru

ஈரான் எங்களை மிரட்ட அனுமதிக்க மாட்டோம் – டொனால்ட் ட்ரம்ப்

April 19, 2026

நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்வின் போது, ஈரானுடனான தற்போதைய பதற்றம் குறித்து அதிபர் ட்ரம்ப் சுருக்கமாகக் கருத்துத் தெரிவித்தார்.

san

வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

April 19, 2026

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக

dd

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

April 19, 2026

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்று உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக வத்திக்கான்

WhatsApp Image 2026-04-19 at 07.36.16

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம்

April 19, 2026

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சித்ரா

may

மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு

April 19, 2026

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp)

LAsan

பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

April 19, 2026

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா

namal

ஜனாதிபதி வேட்பாளராக நாமல்; இரகசிய தகவல் வெளியானது!

April 19, 2026

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த பல கட்சிகளின் கூட்டணியில் நாமல் ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என மொட்டுக்

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா