சென்னை:
“அதிமுக பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யாராவது கையெழுத்து கேட்டால், எனது பெயரைப் பயன்படுத்தினாலும் சரி, யாரும் கையெழுத்துப் போட வேண்டாம்” என்று கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும் என எதிரணியில் உள்ள எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக மாவட்ட வாரியாகப் பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆதரவு கையெழுத்துக்களைப் பெறும் பணிகளில் வேலுமணி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனை முறியடிக்கும் நோக்கில் தனது ஆதரவாளர்களைத் திரட்டி இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். ஏற்கனவே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “எடப்பாடி பழனிசாமியின் பெயரைப் பயன்படுத்தி யாராவது கடிதங்களில் கையெழுத்து கேட்டால் நம்பி ஏமாற வேண்டாம்” என எச்சரித்திருந்த நிலையில், இன்று அதனை இபிஎஸ்ஸும் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். உட்கட்சிப் பூசல் மற்றும் கொறடா விவகாரம் சபாநாயகர் வசம் இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், வேலுமணி தரப்பின் பொதுக்குழு வியூகத்தைத் தடுத்து நிறுத்த இபிஎஸ் எடுத்துள்ள இந்த அதிரடி நகர்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#EdappadiPalaniswami #ADMK_Crisis #GeneralBodyMeeting #WhipControversy #EPSvsVelumani #BreakingNews #May17 #TamilNaduPolitics #AiadmkSplit #GreenwaysRoad #KPMunusamy #ThalapathyVijay #TVK_Government #IntraPartyFeud #PoliticalStrategy #ADMK_News #ChennaiPolitics #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_