கடந்த மாதம் 17 ஆம் தேதி ‘பைசன்’ திரையரங்குகளில் ரிலீசான நிலையில், இப்படத்தின் 25 நாளை நேற்றைய தினம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த மாதம் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் வெளியானது ‘பைசன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படம் பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்களையும், மிகப்பெரிய வரவேற்பினையும் குவித்துள்ளது. நடிகர் துருவ் விக்ரமிற்கு ‘பைசன்’ மிகப்பெரிய வெற்றி படமாகவும், திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படைப்பாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் வெளியாகி 25 நாட்களை கடந்த இப்படத்தின் வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ‘பைசன்’ திரையரங்குகளில் வெளியான நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர். இயக்குனர் மாரி செல்வராஜ், அமீர், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கேக் வெட்டி இதனை செலிபிரேட் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது வரை உலகளவில் ரூ. 80 கோடி கலெக்ஷனை இப்படம் கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பைசன்’ அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவானது. தென் தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், இதனால் அங்குள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆகியவை குறித்து இப்படத்தில் பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.
இப்படத்தில் கபடி வீரராக நடிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தார் துருவ் விக்ரம். அதன் பலனாக திரையில் அப்படியே மணத்தி கணேசனை பிரதிபலித்து இருந்தார். அவருடைய அப்பாவாக பசுபதி மற்றும் அமீர், லால், ‘அருவி’ மதன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். மேலும் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார்.
ஆரம்பத்தில் பைசனுக்கு மெதுவாக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த நாட்களில் படம் பிக்கப் ஆகி விட்டது. அதோடு பலத்தப்பில் இருந்தும் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்ததால், ரசிகர்களை வருகையின் அதிகரித்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை முக்கிய பிரபலங்கள் பலரும் பைசன் படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி தள்ளினார்கள். இதனையடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாகவும் ‘பைசன்’ கொண்டாடப்பட்டது.
இதனிடையில் விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ பைசன் காளமாடன் ‘ வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தியேட்டரை போன்று ஓடிடி ரிலீஸிலும் இப்படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தினை தனுஷ் நடிப்பில் இயக்கவிருக்கிறார். கர்ணனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த காம்போ கூட்டணி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.