பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வாக்குறுதியை நிறைவேற்றுவோம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1700 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தலையிடுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதாக சட்ட ரீதியாக எம்மால் கூற முடியாது. வீதிக்கிறங்கி, உற்பத்திகளை குறைத்து, அசௌகரியங்களுக்கு மத்தியில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்களை உள்ளாக்குவதற்கு நாம் தயாராக இல்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் தேயிலை தொழில்துறை சார்ந்த தோட்டத் தொழிலாளர் தரப்பினரின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் பலருடன் அண்மையில் நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,

எம்மை விமர்சிப்பவர்கள் 76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால் நாம் ஒரு வருடத்தை மாத்திரமே கடந்திருக்கின்றோம். ஒரு வருடத்துக்குள் அனைத்தையும் செய்து விட முடியாது.

அதற்கமைய மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்குவோம். கடந்த ஆண்டு வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு, தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

சட்ட ரீதியாக அரசாங்கத்தால் அதனை செய்ய முடிந்தது. அதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1700 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தலையிடுவோம் என ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் சட்ட ரீதியாக சம்பளத்தை அதிகரிப்பதாக எம்மால் கூற முடியாது. கம்பனிகளே அதனை செய்ய வேண்டும். எனவே தான் இந்த விடயத்தில் நாம் தலையிடுவோம் என உறுதியளித்தோம். வழங்கிய வாக்குறுதிக்கமைய பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். கம்பனிகளின் பிரதானிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஆரம்பகட்டத்தில் அவர்களிடமிருந்து கிடைத்த பதிலளிப்புக்கள் குறைவாகவே இருந்தன.

ஆனால் தற்போது அவற்றில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. இறுதியாக ஜனாதிபதிக்கும் கம்பனிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளில் 1700 ரூபா அடிப்படை நாட் சம்பளம் வேண்டும் என்று கம்பனிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அதனை வழங்குவதில் அவர்களுக்குள்ள பிரச்சினைகள், சிக்கல்களையும் கூறினர். அவை தொடர்பில் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.

அதற்கு முன்னர் 1700 சம்பளத்தை வழங்குங்கள் என்று கம்பனிகளிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். 1700 ரூபா அடிப்படை சம்பளத்தை ஒருபோதும் பெற முடியாது என எதிர்க்கட்சிகளின் மலையகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது பேச்சைக் கேட்டு வீதிக்கு இறங்க வேண்டாம் என தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். வீதிக்கிறங்கி, உற்பத்திகளை குறைத்து, அசௌகரியங்களுக்கு மத்தியில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்களை உள்ளாக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

1700 ரூபாவை விட ஒரு ரூபா கூட குறையாத அடிப்படை சம்பளத்தை நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். எனவே சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்போம் என பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கின்றோம். எனவே இன்னும் சிறு காலம் சற்று பொறுமையாக இருக்குமாறு தொழிலாளர்களிடம் கோருகின்றோம்.

நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்திலும் நாம் இதனை வலியுறுத்துவோம். எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கியதைப் போன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.

leb

திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

March 6, 2026

லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah

har3

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கை பரிந்துரை

March 6, 2026

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப்

1

அமெரிக்காவை கண்டிப்பதற்கு அரசு அச்சப்படுகிறது – எம்.பி. உதுமாலெப்பை

March 6, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று

anu

மத்திய கிழக்கு மோதல்; ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

March 6, 2026

தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம்.

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

sss

கனேடிய சுற்றுலாப் பயணி அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

March 6, 2026

அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள்

saroja

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

March 6, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில்

jeevan

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

March 6, 2026

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த

don

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

March 6, 2026

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி

e

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

March 6, 2026

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி,

ship

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

March 6, 2026

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல்

suz

கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

March 6, 2026

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று