புயல் எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதனை தெரிவிக்கத் தவறியமைக்காக எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடர வேண்டும்

எதிர்க்கட்சியினர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி முதலே புயல் எச்சரிக்கை குறித்து அறிந்திருந்ததாகக் கூறி மௌனம் காத்திருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் 12ஆம் திகதி முதல் புயல் எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதனை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியமைக்காக எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

புயல் வரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமோ அல்லது நீர்ப்பாசனத் திணைக்களமோ அரசாங்கத்திற்கு எவ்வித முன் அறிவிப்பையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தாங்கள் கூறியது போல் எச்சரிக்கை குறித்து அறிந்திருந்தால், அரசாங்கத்தைப் போலவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான எதிர்க்கட்சிகளுக்கும் இதேபோன்ற பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற எதிர்க்கட்சிகள் கடந்த நவம்பர் 12 முதல் நவம்பர் 26 வரை 14 நாட்கள் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டன. அவர்களில் எவரும் அதனை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை.

மாறாக, அனர்த்தம் ஏற்படும் வரை அதை இரகசியமாக வைத்திருந்தனர். இத்தகைய அனர்த்தத்தைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பது போலவே, எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களும் மக்களின் வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே என்று மகிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதை வெளியிடாமல் மறைத்தமை மூலம் எதிர்க்கட்சியினரே அரசாங்கத்தை விட மோசமான குற்றத்தைச் செய்துள்ளதால், அரசாங்கத்தின் மீது அல்லாமல் எதிர்க்கட்சியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்