புங்குடுதீவில் இருந்து தொழிலிற்காக கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். 4737 என்ற இலக்கமுடைய படகில் சென்ற இவர்கள் நேற்று (06.06. 2026) மதியம் 12.45 மணியளவில் இறுதியாக தொடர்பு கொண்டு பேசிய போது நைனாதீவு தமக்கு தெரிவதாக தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்தனர், எனினும் தற்போது வரை அவர்கள் கரை சேரவில்லை என்பதுடன் அவர்களது அலைபேசிகளும் செயலிழந்துள்ளதாக தெரியவருகிறது

