புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும் உடனடியாக வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் புகையிரத திணைக்களத்திற்கு விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளதுடன், விநியோகப் பாதைகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கும் என்பதால் மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை நாட வேண்டிய நிலை ஏற்படக் கூடும்.

ஆகையால் இந்த சவால்களை எதிர்கொள்ள அலுவலக புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைத்து, ஒற்றைத் தொகுதியாக இயங்கும் புகையிரதங்களை இரட்டைத் தொகுதிகளாக இயக்குவதன் மூலமும் பயணிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். மீரிகம, பாதுக்கை, பாணந்துறை, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு போன்ற புறநகர்ப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதோடு பயணிகளை ஈர்க்கும் வகையில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் கூடிய அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்து தொடர்பிலும் அவதான செலுத்தப்பட வேண்டும்.

அத்தோடு பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களை புகையிரத நிலையங்களில் நிறுத்திவிட்டு புகையிரதத்தில் பயணத்தைத் தொடரக்கூடிய வகையில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதுடன், பழுதடைந்துள்ள எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை உடனடியாகப் புனரமைத்து சேவையில் ஈடுபடுத்த, அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கொழும்பு போன்ற நகர்ப்புறங்களுக்குள் தனியார் வாகனங்கள் நுழைவதைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது அவசியம் என அச்சங்க்ம் வலியுறுத்தியுள்ளது.

Mujibar Rahuman

நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

March 18, 2026

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும்

rail

புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

March 18, 2026

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும்

bima

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

March 18, 2026

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு

Gotta

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

March 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை