பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு £10,000 வீதம் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் நான்கு பேருக்கு இந்தத் தொகை வழங்கப்படும் இந்தச் சலுகையை ஏழு நாட்களுக்குள் ஏற்றுக்கொண்டு வெளியேறத் தவறினால், அவர்கள் கட்டாயமாக நாடுகடத்தப்படுவார்கள் என்று அரசு எச்சரித்துள்ளது.

தற்போது சுமார் 150 குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், வரி செலுத்துவோரின் பணத்தில் சுமார் £20 மில்லியன் வரை சேமிக்க முடியும் என உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

தற்போது தஞ்சம் கோருபவர்களின் தங்குமிட வசதிகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு £158,000 வரை செலவாவதாகக் குறிப்பிட்டுள்ள ஷபானா மஹ்மூத், இந்த புதிய நிதியுதவித் திட்டம் அரசுக்கு பெரும் இலாபகரமாக இருக்கும் என்று வாதிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டில் பெறப்பட்ட 82,100 தஞ்சக் கோரிக்கைகளில் 58% நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அரசு வழங்கும் தங்குமிட வசதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்துள்ளது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகள் கூட்டமைப்பு (RMCC), இவ்வளவு பெரிய முடிவை எடுக்க குடும்பங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே அவகாசம் வழங்குவது மனிதாபிமானமற்றது என்றும், இது குழந்தைகளை வீதியோரம் தள்ளும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

பசுமைக் கட்சி (Green Party) இந்த நடவடிக்கையைத் தீவிர வலதுசாரி கொள்கைகளின் எதிரொலி என விமர்சித்துள்ளது.

அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியினர் இந்த நடவடிக்கை போதாது என்றும், குற்றவாளிகளை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் சுமார் 100 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதி அந்தஸ்தைத் தற்காலிகமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் 2029ஆம் ஆண்டுக்குள் ஹோட்டல் பயன்பாட்டை முழுமையாக ஒழித்து, அகதிகளை முன்னாள் இராணுவ முகாம்கள் போன்ற குறைந்த செலவிலான இடங்களுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

bah

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

March 6, 2026

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம்

man

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

March 6, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு

joh

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

March 6, 2026

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம்

sl

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக

cru

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

March 6, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

pil

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

March 6, 2026

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்

fiwh

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

March 6, 2026

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த

car

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

March 6, 2026

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27

st

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

March 6, 2026

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க”

download

படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து

pr

ஈரானுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

March 6, 2026

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து, ‘எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ (No Blood

Sivali

இலங்கையில் மிக உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!

March 6, 2026

இலங்கையின் மிக உயரமான 6 அடி உயர சிவலிங்கம், இன்று (06) காலை புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.