பிரபஞ்ச அழகிப் போட்டியில் மெக்சிகோ பெண்ணை மேற்பார்வையாளர் அவமதித்தார்?

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள் பங்கேற்ற ஒரு அழகிப் போட்டி நிகழ்வில் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ், போட்டியின் மேற்பார்வையாளரால் “முட்டாள்” என்று கூறி அவமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பலவேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிகள் பேங்கொக்கில் குவிந்துள்ளனர்.

இதனிடையே அழகிப் போட்டிகள் பங்கேற்கும் மற்றுமொரு போட்டி நிகழ்வொன்றில், அப்போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில், போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

பின், மெக்சிகோ அழகி பாத்திமா போஷை அழைத்து, விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளாததற்கு விளக்கமளிக்குமாறு கேட்டார். அவ்வேளை, பாத்திமா போஷ் பேச முற்பட்டபோது, அவரை “முட்டாள்” என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனையடுத்து, அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கேட்க, பாத்திமா போஷ், “நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும் எனது நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை” என கோபமாக கூறினார்.

இதையடுத்து, மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதற்காக மற்ற போட்டியாளர்களும் கோபமடைந்தனர்.

தான் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து, பாத்திமா போஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக பல நாட்டு அழகிகளும் வெளிநடப்பு செய்தனர். அதேவேளை தற்போதைய மிஸ் பிரபஞ்ச அழகி விக்டோரியாவும் அங்கிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, போட்டி மேற்பார்வையாளர் நவத் கூறுகையில், அழகிகள் போட்டியிட விரும்பினால் இங்கே உட்கார வேண்டும் என்றார்.

எனினும், அவரது பேச்சை செவிமடுக்காத போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் அந்த அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பின்னர், நவத் மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மிஸ் பிரபஞ்ச அமைப்பு கூறுகையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மரியாதைக்குரிய தொழில்முறை சூழலை உறுதி செய்ய ஒரு மூத்த நிர்வாகிதாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12