பிரபஞ்ச அழகிப் போட்டியில் மெக்சிகோ பெண்ணை மேற்பார்வையாளர் அவமதித்தார்?

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள் பங்கேற்ற ஒரு அழகிப் போட்டி நிகழ்வில் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ், போட்டியின் மேற்பார்வையாளரால் “முட்டாள்” என்று கூறி அவமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பலவேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிகள் பேங்கொக்கில் குவிந்துள்ளனர்.

இதனிடையே அழகிப் போட்டிகள் பங்கேற்கும் மற்றுமொரு போட்டி நிகழ்வொன்றில், அப்போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில், போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

பின், மெக்சிகோ அழகி பாத்திமா போஷை அழைத்து, விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளாததற்கு விளக்கமளிக்குமாறு கேட்டார். அவ்வேளை, பாத்திமா போஷ் பேச முற்பட்டபோது, அவரை “முட்டாள்” என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனையடுத்து, அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கேட்க, பாத்திமா போஷ், “நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும் எனது நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை” என கோபமாக கூறினார்.

இதையடுத்து, மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதற்காக மற்ற போட்டியாளர்களும் கோபமடைந்தனர்.

தான் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து, பாத்திமா போஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக பல நாட்டு அழகிகளும் வெளிநடப்பு செய்தனர். அதேவேளை தற்போதைய மிஸ் பிரபஞ்ச அழகி விக்டோரியாவும் அங்கிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, போட்டி மேற்பார்வையாளர் நவத் கூறுகையில், அழகிகள் போட்டியிட விரும்பினால் இங்கே உட்கார வேண்டும் என்றார்.

எனினும், அவரது பேச்சை செவிமடுக்காத போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் அந்த அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பின்னர், நவத் மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மிஸ் பிரபஞ்ச அமைப்பு கூறுகையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மரியாதைக்குரிய தொழில்முறை சூழலை உறுதி செய்ய ஒரு மூத்த நிர்வாகிதாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்