பாப்பரசர் 14ஆம் லியோவிடம் சான்றாதாரப் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கையின் புதிய தூதுவர்

ஜெனீவாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் – அப்போஸ்தலிக் அரண்மனையில் பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தனது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, அவர் ஜெனீவாவில் வசித்தவாறே வத்திக்கானுக்கானஇலங்கையின் அடுத்த தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாப்பரசர் 14ஆம் லியோ, “தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு நிபந்தனையாக ஆயுதங்கள் மூலம் அமைதியைத் தேட முயற்சிக்கும் இவ்வாறானதொரு காலகட்டத்தில், இருதரப்பு, பிராந்திய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதோடு, இணக்கப்பாடுகளைத் தேடும் இராஜதந்திரத்தை நோக்கி மீண்டும் திரும்புவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

தூதுவர்களின் சேவை, அந்தந்த நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு முக்கிய பாலமாகும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நமது கூட்டு முயற்சிகள் இருதரப்பு மற்றும் பன்முக உறவுகளுக்குப் புதிய உயிர் கொடுக்க பங்களிப்பதுடன், நமது சமூகங்களில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தவும் உதவும். இதன் மூலம் மிகவும் நியாயமான, சகோதரத்துவம்மிக்க மற்றும் அமைதியான உலகிற்கு வலுவான அடித்தளமிடுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற முடியும் என்றார்.

இதன்போது, தூதுவர் சுமித் தசநாயக்க, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்துகளை பாப்பரசரிடம் சமர்ப்பித்ததுடன், இலங்கைக்காகவும்; மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்பு உறவுகளை நினைவு கூர்ந்த தூதுவர் சுமித் தசநாயக்க, 2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் பாப்பரசர் 14ஆம் லியோவுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள அழைப்பையும் மீண்டும் நினைவுபடுத்தினார்.

இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வுக்கு இணையாக, தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் இராஜங்கச் செயலாளர் கர்தினால் பீட்டர் பரோலினையும் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக 2025 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகரையும் தூதுவர் சந்தித்தார்.

இதன்போது, பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் தனது இலங்கை விஜயம், அதன் முக்கியத்துவம் மற்றும் இலங்கையிலிருந்து தமக்குக் கிடைத்த விருந்தோம்பல் என்பனவற்றை பாராட்டி நினைவு கூர்ந்தார்.

தூதுவர் சுமித் தசநாயக்கவுடன் இணைந்து சர்வதேச நாடுகளான சியெரா லியோன், பங்களாதேஷ், யேமன், ருவாண்டா, நமீபியா, மொரிஷியஸ் மற்றும் சாட் ஆகிய நாடுகளின் வதிவிடமற்ற தூதுவர்களும் அன்றைய தினமே பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தங்களது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்.

Walk-1

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 11, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

makkas

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

June 11, 2026

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு

sun

தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

June 11, 2026

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட

kaj

மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

June 11, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர்

KXQH3VQHQ565YO7OI3PWRRR3JU

ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக்

trump june 26

கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

June 11, 2026

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA /

calgary police

டெம்பிள் இல்லத்தில் பெண் மற்றும் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு: கால்கரி போலீஸ் தகவல்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் டெம்பிள் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து கால்கரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BAN6UJQJQVHRHJEZ3LBQDOOY6Y

கனடாவை ‘போர்வெறியர்’ என விமர்சிக்கும் ரஷ்யா; ட்ரோன் ஒப்பந்தத்திற்குப் பதிலடி கொடுக்கவும் சபதம்

June 11, 2026

உக்ரைனுடன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டதற்காகக் கனடாவை “போர்வெறியர்” (Warmonger) என்று மாஸ்கோ சாடியுள்ளதுடன், உக்ரைன் தலைநகர்

721702804_122296711556194641_7490025560383065704_n

குற்றவியல் சுற்றுலாவுடன் தொடர்புடைய பிஎம்டபிள்யூ (BMW) மோசடித் திட்டம்: இரண்டு ருமேனியர்களுக்கு வலைவீச்சு

June 11, 2026

கனடாவிலிருந்து சொகுசு வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு, பிக்கரிங் (Pickering) வாகன விற்பனையகத்திலிருந்து போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அவற்றை

723067488_122296713872194641_4518704743392514271_n

பணப்பறிப்புத் தாக்குதல் சர்ரே வீடு இலக்கு: மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளுக்குத் தண்டனை

June 11, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே (Surrey, B.C.) நகரில் உள்ள ஒரு வீடு, துப்பாக்கிச் சூடு மற்றும் சிறிய தீ வைப்புச்

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் ஜனாதிபதி

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle