பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்கள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வுநிலை) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.11.21 ஆம் திகதி முதல் தாக்கம் செலுத்திய திட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு 2025.11.28 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தல் ஊடாக முழு இலங்கைக்கும் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதுடன், அன்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கையின் 03/2025 ஊடாக 2025.11.21 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் இலங்கை முழுவதும் அனர்த்த நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைமளித்தல், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கல்,முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்கல்,பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கல் உட்பட பல நிவாரணங்கள் 2025.12.05 ஆம் திகதி வெளியிடப்பட்ட செலவு சுற்றறிக்கை 08./2025 ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டிலுக்காக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நிவாரணம் வழங்கலுக்காக சம்பந்தப்படும் நிறுவனங்களின் பொறுப்புக்கள்.

இந்த சுற்றறிக்கை ஊடாக நிச்சயிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணத்துக்கமைய அனர்த்த சேவை வழிகாட்டல், 01/2025,2,1 பிரகாரம் கிராமிய அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவை குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு காணப்படும் மாதிரிகளுக்கு மேலதிகமாக நிர்வாக கிராம சேவகர்,

சமூக சேவை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,சிறுவர் காப்புறுதி உத்தியோகத்தர்,வயது முதிர்ந்தோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறு வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர், பௌத்த விவகார உத்தியோகத்தர்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வீடமைப்பு உத்தியோகத்தர், ஏனைய துறை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் நிவாரணம்

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்வதற்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். சொந்த வீடு மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதி

2025.11.21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் முழுமையாக சேதமடைந்த வீடு, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பகுதியளவிலான பாதிப்பு, வீட்டுக்கு சேதம் ஏற்படாத பட்சத்தில் வெள்ளம், சூறாவளி, மண்சரிவு ஆகிய தாக்கங்களில் அசுத்தமடைந்த வீட்டை துப்பரவு செய்வதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

காணியின் உரிமை

காணியின் உரிமை மற்றும் வருமானம் ஆகிய காரணிகளை கருத்திற் கொள்ளாமல் இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும்.சொந்த வீடு,வாடகை வீடு, சட்டவிரோத குடியிறுப்பாளர்கள், அரச உத்தியோகபூர்வ வீடுகளில் வசிப்போருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் கொப்பிகள்,எழுதுவினை பொருட்கள் மற்றும் சீறுடைகளை கொள்வனவு செய்வதற்கு ஒருதடவை மாத்திரம் ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட வகையில் பரிந்துரை செய்யப்படும் மாதிரி 2.7 விண்ணப்பத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டு 2.7.1 (பிரிவு) மாதிரி ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக மாவட்ட செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கொடுப்பனவை வழங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வாடகை வீட்டில் வசிக்க ஆறு மாத காலத்துக்கு 25 ஆயிரம் ரூபா

மண்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு பாதிப்பால் வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் புதிய வீட்டை நிர்மாணித்துக் கொள்ளும்வரை பிறிதொரு இடத்தில் குடியிறுப்பதற்கு 25 ஆயிரம் ரூபா ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படும்.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வசிப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என்று அறிவுறுத்தப்பட்ட பகுதியில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வாடகை வீட்டில் வசித்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படாது.

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி