பாதாள உலக கலாசாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சனிக்கிழமை (01) மத்திய கொழும்பு தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம பிரிவுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மேம்பாட்டிற்காக நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச அவர்கள் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாநகரசபை அதிகாரம், பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி அதிகாரம் போன்றவற்றைத் தன்வசம் வைத்திருக்கும் தற்போதைய அரசாங்கம் கூறிய விடயங்கள், வழங்கப்படும் எனக் கூறிய சலுகைகள், வாக்குறுதிகள் மற்றும் சேவைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அபிவிருத்தியால் ஒளிரும் நகரத்தை உருவாக்குவோம் என்ற கூற்றுக்கள் இன்று நிறைவேறவில்லை. அபிவிருத்தி நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே இயங்குகிறது.

மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, மீண்டும் வீட்டிற்குத் திரும்புவார்களா என்ற நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடக்குமா அல்லது கொலை நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.

நாட்டு மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு கூட இன்று இல்லை. தேசிய பாதுகாப்பும் இழக்கப்பட்டு, இந்த அரசாங்கத்தின் இயலாமையால் சட்டம் ஒழுங்கு குண்டர் கும்பல் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சத்திலும் சந்தேகத்திலுமே இயங்குகிறது.

பிரஜாவுரிமை (ஜனநாயகம்) புதைகுழியில் தள்ளப்பட்டுத் தனிப்பட்ட கட்சியின் ஆட்சியை நோக்கி நாடு செல்கிறது. உள்ளுர் சபை தலைவர்கள் கொல்லப்படுதல், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுதல் போன்ற ஜனநாயகத்தை அழிக்கும் சூழ்நிலையில், பாதாள உலகம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு நாடு சென்றுள்ளது.

சட்டம் சீர்குலைந்து காட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் நீதி மற்றும் நியாயம் கிடைக்காத சூழலில் அனைத்து சமூக அமைப்புகளும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொய்யான கதைகள் பேசாமல், அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவோம் என்று கூறும் அரசாங்கம், அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தி துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் குண்டர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றார்.

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்

ajar

அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

March 6, 2026

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

kat

இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

March 6, 2026

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக

har

சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

March 6, 2026

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள

Dengue

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

March 6, 2026

மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக

boa

நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

March 6, 2026

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும்

Pee

பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

March 6, 2026

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும்

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா