பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள்; உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!

கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கும் இடையில் பாராளுமன்றக் குழு அறையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வி அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து புதிய திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இதன் மூலம், 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள், 251 – 500 வரையிலான மாணவர்கள் உள்ள தோட்டப் பாடசாலைகள், விசேட தேவையுடைய பிள்ளைகள் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களைச் சேர்ந்த பிக்குமார் மற்றும் மாணவச் சமூகம் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலைச் சப்பாத்துகளைக் கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கை நெசவு மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தக் காலணிகளின் தரம் கண்காணிக்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.

உற்பத்தியாளர்கள் ஒரு வருட உத்தரவாதத்தின் கீழ் தரமான சப்பாத்துகளை வழங்க இணங்கியுள்ளதாகவும், விற்பனையாளர்கள் நேரடியாகப் பாடசாலைகளுக்குச் செல்வதன் மூலம் மாணவர்கள் சரியான அளவிலான சப்பாத்துகளைத் தெரிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் எனவும் கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பிரதமரின் முன்னிலையில் தெரிவித்தார்.

இதன் முன்னோடித் திட்டத்தின் கீழ், மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர், ஏனைய மாகாணங்களில் இத்திட்டத்தைச் செயற்படுத்துவது பொருத்தமானது எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்களும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர அவர்களும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்