பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது.-வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்

பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில்தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்’ என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு ‘பவள விழா’ நிகழ்வுகள்  கோலாகலமாக நடைபெற்றன.  விசேட இரண்டாம் அமர்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
கல்லூரியின் அதிபர் க.ஜெயவீரசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பாடசாலையின் வரலாற்றைக் கூறும் ‘வித்தியாதீபம்’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் உள்ளிட்ட கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆளுநரால் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும், பாடசாலையின் ‘வித்தியின் சிறப்புமிகு மைந்தன்’ விருது, மருத்துவர் கலாநிதி வீரகத்திபிள்ளை சண்முகராஜா மற்றும் கலாநிதி வி.நவநீதன் ஆகியோருக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
‘அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரது அர்ப்பணிப்பாலேயே இன்று இந்தப் பாடசாலை உயர்ந்து நின்று பவளவிழாக் காண்கின்றது. நான் எப்போதும் தலைமைத்துவத்தையே வலியுறுத்தி வருகின்றேன். எந்தவொரு பாடசாலையினதும் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. சிறப்பான தலைமைத்துவம் அமைந்தால் அந்த நிறுவனம்
எழுச்சியடையும்;. தவறான தலைமைத்துவம் கிடைத்துவிட்டால் அது வீழ்ச்சியடையும். தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் உயர்பதவிகளில் இருப்பதால் நாம் தினமும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றோம். தலைமைத்துவப் பண்புக்கு மேலதிகமாகச் சமூகப் பொறுப்பும் மனிதநேயமும் அவர்களிடம் இல்லாததால் பாதிக்கப்படுவது எமது மக்கள்தான்.
‘உயர் ஆளுமையும் நற்பண்புகளும் கொண்ட நாளைய தலைவர்களை உருவாக்குவதில் வடக்கு மாகாணத்தின் முன்னணிப் பாடசாலையாக இதனை உருவாக்குவோம்’ எனப் பாடசாலையின் அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவரது தூரநோக்குக்கு எனது பாராட்டுக்கள். காலத்துக்குத் தேவையான விடயத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். படித்து உயர்நிலைக்கு வந்து பணத்தைச் சம்பாதித்தால் சரி என்றே பலர் நினைக்கின்றனர். இப்போதுள்ள புதிய தலைமுறையினருக்கும் அதுதான் இலக்காக இருக்கின்றது. அது முற்றிலும் தவறு. புதிய தலைமுறைக்குச் சேவை மனப்பாங்கு என்றால் என்னவென்றே தெரியாத காலமாக இது மாறி வருகின்றது. எனவே, பாடசாலைகள் இளவயதிலேயே பிள்ளைகளுக்குப் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழக்க வேண்டும்.
இன்று இந்தப் பாடசாலையால் கௌரவிக்கப்பட்ட மருத்துவர் சண்முகராஜா மற்றும் கலாநிதி நவநீதன் ஆகிய இருவரையும் எனக்கு நன்கு தெரியும். சேவைத்துறைகள் பணமீட்டும் துறைகளாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அவர்கள் எவ்வாறு தமது உயிரைத் துச்சமாக மதித்துச் சேவை செய்தார்கள் என்பதை அதிபர் இங்கு நினைவுகூர்ந்தார். பாராட்டுக்களையும் கௌரவங்களையும் நாடாதவர்களைத் தேடித்தான் அவை செல்லும். அவர்களைப் போன்று இன்றுள்ள இந்தப் பிள்ளைகளும் நாளை உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்தக் கௌரவிப்பு வழங்கப்படுவதாக அதிபர் சொன்னார்;. அது முற்றிலும் உண்மையாகும். அப்படியான சேவையுள்ளம் கொண்டவர்களாகத்தான் நீங்கள் வளர வேண்டும். இந்தச் சமூகத்துக்காக அவர்கள் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.
நாம் எவ்வளவுதான் படித்து உயர் நிலைக்கு வந்தாலும், சமூகத்துக்குச் சேவை செய்யாவிட்டால் நாளை எவரும் மதிக்க மாட்டார்கள். பணத்தை உழைப்பதால் மதிப்பு வராது. சேவையைச் செய்தால்தான் மதிப்பு வரும். நான் இந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம், ‘இங்கு படிக்கும் இந்த மாவட்டத்துப் பிள்ளைகள் ஏன் மீண்டும் இந்த மாவட்டத்துக்குச் சேவை செய்ய வருகின்றார்கள் இல்லை?’ எனக் கேட்டார். எமது பிள்ளைகளிடத்தில் எமது மாவட்டம், எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும். அதைப் பாடசாலைகளால்தான் செய்ய முடியும்.
இன்று பேருந்தில் பயணிக்கும்போது குடிநீர் குடித்துவிட்டுப் போத்தலை வீதியில் வீசுகின்றார்கள். வீதியில் செல்லும்போது குப்பைகளைப் போடுகின்றார்கள். அதைச் செய்யும் இன்றைய புதுத் தலைமுறையினருக்குத் தாம் செய்வது பிழையென்ற உணர்வோ அல்லது குற்ற உணர்வோ ஏற்படுவதில்லை. அந்தளவுக்கு அவர்கள் மாறிவிட்டார்கள். எனவே, அவர்களுக்குச் சரியானதைச் சொல்லிக் கொடுத்து மாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பாடசாலைகளுக்கும் எங்களுக்கும் உள்ளது. இதைச் செய்யத் தவறினால் சமூகத்தின்பால் சிந்திக்கும் ஒரு தலைமுறை எதிர்காலத்தில் இல்லாமல் போகும். எனவே, பாடசாலைகள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,’ எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது