பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை – மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை  பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பிரதிவாதி பிணை மனுவைத் தாக்கல் செய்யும் போது சுமார் 15 வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் போது 26 வயதுடைய இளைஞனாக இருந்தாரெனவும், வழக்கு விசாரணையை எதிர்பார்த்து அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதி சிறையிலேயே கழிக்க நேரிட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த பயங்கரவாத வழக்கின் மூன்றாவது  பிரதிவாதியான  தம்பையா பிரகாஷ் அல்லது தனுஷ் என்பவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை இரத்து செய்தே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பானது நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதியரசர்கள்  அமர்வு  இந்த உத்தரவை  அறிவித்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த  பிரதிவாதிக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகள்  என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் சாட்சியாளர்களாக 106 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடுமையான நிபந்தனைகளின் கீழ்  பிரதிவாதிக்கு 200,000 ரூபா ரொக்கப் பிணை, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகள் விதித்து பிணை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டது.  மேலும் இரு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறும் மற்றும் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்  எனவும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்படி பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் நாடாளுமன்றத்தினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15 பி  பிரிவு உள்ளடக்கப்பட்டு,  விசேட நிலைமைகளின் கீழ் பிணை வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், மேல் நீதிமன்றம் பிணையை நிராகரித்த போது அந்தத் திருத்தத்தின் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக கருத்திற் கொள்ளவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம்  இதன்போது அவதானித்துள்ளது.

பிரதிவாதி கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வயது நிறம்பிய மகள்  இருந்ததாகவும் இந்த நீண்டகாலத் தடுப்புக்காவல் காரணமாக, அவரது குடும்பத்தினருக்கு அவரது அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாது போயுள்ளதாகவும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில்  பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி அருண மதுசங்கவுடன் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர முன்னிலையாகியிருந்ததோடு, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”