பதிலளிக்க பாராளுமன்றத்துக்கு வருகை தர தயார் – மத்திய வங்கி ஆளுநர்

நிதிக் கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவில் முன்னிலையானபோது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பும் போது முறையான பதில் கிடைப்பதில்லை, பாராளுமன்றத்துக்குள் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் கிடையாது என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சரிடமே நேரடியாக கேள்விகேட்பார்.

எழுப்பப்படும் கேள்விகள் குறித்து நிதியமைச்சர் எம்முடன் கலந்துரையாடுவார். தேவைப்படும் பதிலுக்கான கேள்வி ஒருநாளைக்கு முன்னதாகவே எமக்கு கிடைக்கப்பெறும்.

முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு எவ்வழியிலாவது பதிலளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.விடைகளை நிதியமைச்சருக்கு அனுப்பி வைப்போம்.இதுவே பின்பற்றப்படும் வழிமுறை.

நிதியமைச்சர் ஊடாக அனுப்பிவைக்கப்படும் சகல கேள்விகளுக்கும் உரிய காலப்பகுதியில் நாங்கள் பதிலளித்துள்ளோம் என்பதை என்னால் உறுதியாக குறிப்பிட முடியும்.

முன்வைக்கப்படும் ஒருசில கேள்விகள் மத்திய வங்கிக்கு மாத்திரம் உரித்தானது அல்ல, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் விடைகளை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சர் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடைகளை வழங்குவார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்க்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என்றார்.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12