நோபல் பரிசு பெற்ற டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்

டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம் ஆண்டு ‘நியூக்ளின்’ என்று பெயரிட்டார். ஆனால், டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஆங்கில இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆவர். இவர்கள் 1953ம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தனர்.

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். பிரான்சிஸ் கிரிக் உடனான இவரது புரட்சிகரமான பணி நவீன மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை மாற்றியது. இவரது மரணத்தை லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியது. அங்கு அவர் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

வாட்சன், பிரிட்டிஷ் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக்குடன் சேர்ந்து, 1953ம் ஆண்டில் டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டுபிடித்தார். இது உயிரியலில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனையாகும். மேலும் மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு வழி வகுத்தது. இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் 1962ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

யார் இந்த ஜேம்ஸ் வாட்சன்?

* ஏப்ரல் 6ம் தேதி 1928ம் ஆண்டு சிகாகோவில் பிறந்த ஜேம்ஸ் வாட்சன், 19 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

* 1951ம் ஆண்டில், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவென்டிஷ் ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கிரிக்கைச் சந்தித்து டிஎன்ஏவின் கட்டமைப்பைக் கண்டறியும் தனது தேடலைத் தொடங்கினார்.

* டிஎன்ஏ கண்டுபிடிப்புக்குப் பிறகு, வாட்சன் 1956ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு, அவர் மரபியல் புரட்சியை உருவாக்க இளம் விஞ்ஞானிகளின் தலைமுறையை ஊக்கப்படுத்தினார்.

* 1968ம் ஆண்டில், வாட்சன் கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் இயக்குநரானார். அங்கு அவர் நீண்டகாலமாக பணியாற்றினார்.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் இவரது பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது என புகழாரம் சூட்டி உள்ளனர்.

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி